.

Loading...

சனி, 1 நவம்பர், 2014

குமரி மாவட்டத்திற்கு இன்று 59-வது பிறந்தநாள்!


குமரி மாவட்டத்திற்கு இன்று 59-வது பிறந்தநாள்!

குமரித் தந்தை மார்ஷல் எ. நேசமணியின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தை திருவிதாங்கூரில் இருந்து மீண்டெடுத்து தாய்த் தமிழகத்துடன் இணைத்து இன்றுடன் (01-11-2014) ஐம்பத்தி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆயினும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்கின் குமரி மாவட்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. விவசாயம், நீர்வழிப் போக்குவரத்து, உயர்கல்வி, பன்னாட்டு விமானப் போக்குவரத்து, நிலவழிப் போக்குவரத்து, காற்று மண்டலம் மாசுபடுதலைத் தவிர்த்தல், ஆய்வு நிலையங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துல் போன்றத்துறைகளில் போதிய வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அரசுக்குத் தந்து, அவைகளைச் செயலாக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகிக்கள் இதுகாறும் உகந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளும், அரசியலாளர்களும் கூட இவைகளை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போய் விடுகின்றனர். எனவே, இம்மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பல திட்டக் குறிப்புகளை, இம்மாவட்டத்தை உருவாக்குவதில் குமரித் தந்தை மார்ஷல் நேசமணியுடனே தோளோடு தோள் நின்று தியாகங்கள் புரிந்த நாங்கள் மக்களின் பார்வைக்காகவும், அரசின் பரிசீலனைக்காகவும் இங்கே தருகிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டக்குறிப்பு:

பழைமை வாய்ந்த மன்னர் நாடான திருவிதாங்கூரின் தென் பாகங்களாக இருந்த தாலுகாக்களை, குமரித் தந்தை எ. நேசமணியின் வீரத்தலைமையின் கீழ் நின்று போராடிப் பிரித்துதெடுத்து, “கன்னியாகுமரி மாவட்டம்” என்ற பெயரில் 1956 நவம்பர் மாதம் முதல் நாளன்று தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற இப்பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து, அதற்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் எனப் பெயரிட்டு செயல்படுத்தத் தொடங்கியது மத்திய அரசு. இதன்படி முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1950 - 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேச வளர்ச்சிக்கு என வகுக்கப்பட்ட திட்டங்களை, பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டுஇறிகேஷன்(Lift irrigation) திட்டம், போன்ற முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்திருந்தனர். இந்த ஐந்தாண்டு திட்டத்தில் வகுக்கப்பட்டிருந்த திட்டங்களில் சிலவற்றையாவது செயல்படுத்துவதற்கும் திருவிதாங்கூர் அரசு சுணக்கம் காட்டியது. மக்கள் தலைவர்கள் பல வேளைகளில் வருந்தி வேண்டிக் கொண்டும், இப்பிரதேச வளர்ச்சித் திட்டங்களுக்காக ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை அரசு வேண்டுமென்றே வடதிருவிதாங்கூர் வளர்ச்சிக்கெனத் திருப்பி விட்டது. இதனால் தென்திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களை முற்றிலும். புறக்கணித்தது பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் மாநில பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, நாட்டைப் பிரிப்பதற்கான முதற்காரணமாக அமைந்தது என்பதும் உண்மை.

திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டு வந்தமையால் சாதி கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும் நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுப்படுத்தினர். இந்த மானங்கெட்ட வாழ்விலிருந்து முழு விடுதலை வேண்டியும் பிரிந்து செல்வதற்கு தமிழ் மக்கள் தயாராயினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

இந்த குறிக்கோள்கள் நிறைவேறும்படியாக, தமிழ்மக்கள் மலையாளி நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு சமுதாய மக்களுக்கு எதிராக விடுதலைப் போர் புரிந்தனர். 1948-ல் இப்போர் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அன்று செயலாற்றி வந்தார். இழிவு சமூகத்தாரின் பல்வேறு சமுதாய மறுமலர்ச்சியால் பொறாமைத் தீயை தமிழ்மக்கள் எதிராக வளர்த்துக் கொண்டு இவர்களின் மேல் அடக்குமுறைக் கொடுமைகளை அவிழ்த்துவிட்டார் திரு.தாணுபிள்ளை. மங்காட்டில் திரு.தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் திரு.செல்லைய்யன் நாடாரையும் மலையாளிக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சமுதாயத்துக்கும், நாயர் சமுதாயத்திற்கும் முட்டலும், மோதலும் நடந்த வண்ணமிருந்தன. நாயர்களுக்கு பட்டம் தாணுபிள்ளையும் அவர்களின் அரசு இயந்திரங்களும் ஆதரவுக்கரம் அளித்தது. இந்த சுசூழ்நிலையில் 1954 ஆகஸ்டு 11-ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்கள் முழுவதிலும் “விடுதலைதினம்” கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்திலும் பட்டம் தாணுபிள்ளைதான் திருவிதாங்கூர் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின்டி தமிழர்கள் மீது இரண்டாவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாளி காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறு பேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிபட்டு உயிர் நீத்தனர். துப்பாக்கிச் சூட்டுடனே பட்டம் தாணுபிள்ளையின் நரவேட்டை நின்று விடவில்லை. இதைத் தொடர்ந்து, பட்டம் தாணுபிள்ளையின் வீழ்ச்சி நாள் (14.02.1955) வரை அதாவது 188 நாட்கள் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களில் தமிழ் மக்கள் மீது போலீஸ்காரர்கள் நரவேட்டையாடினர். அனேகர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் அடைந்த சிறைத் துயரங்களை அறிந்து கொள்வதற்கு அறிவர் டி.பீட்டர் அவர்கள் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான “குமரி மாவட்ட விடுதலை (கல்குளம் – விளவங்கோடு) நாடார் மக்கள் தந்த விலை (1948 – 1954)” என்ற நூலைப் படித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், பஞ்சாப்பில் நடந்த “ஜாலியன் வாலாபாக் படுகொலைதான்” மிகவும் கொடுமையானது என்று இந்தியா வரலாறு பறைசாற்றுகிறது. ஆனால் அந்த கொடுமை ஒரே நாளில் முடிந்து விட்டது. அடுத்த நாள் தொட்டு ஆங்கிலப் படை அமைதி காத்தது. ஆனால் _பட்டம் தாணுபிள்ளை அரசின் காவல்துறையினபர் 11.08.1954 தொட்டு 188 நாட்கள் அதாவது 6 மாதங்களும் 8 நாட்களும் தொடர்ந்து தமிழ் மக்களை மட்டும் குறி வைத்து நரவேட்டையாடினர். இது போன்ற நரவேட்டை உலக வரலாற்றில் எங்கும் காண்பது அரிது. இந்த அட்டூழியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பது பிரிந்து செல்வதற்கான மூன்றhவது காரணமாக அமைந்தது.

குமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர். குறிப்பிட்டுக் கூறுவதென்றால், இளைஞர் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு வேதனையாக உள்ளது. இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் தமிழ் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக தமிழ் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் தமிழ் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.இதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் பாசத்தோடு குமரி மாவட்டத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.

இவைகளின் தொடர்ச்சியாக 01.11.1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று (01.11.1956) தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், நாகர்கோவில் S.L.B கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்ப்பு விழாவில் இவ்வாறு ஏற்புரையாற்றினார்்-

“நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடுனே சேருவதாற்கு நான் ஒழுங்கு செய்யலாம்” என்றார்.

குமரி மாவட்டத்தை தமிழ்நாடு அரசு அன்று முதல் புறக்கணிக்கத் தொடங்கியதிலிருந்து, இன்று வரை இதை புறக்கணித்து வரப்படுகிறது. இதற்குப் பிறகு நெல்லைதான் தமிழகத்தின் எல்லையாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் அரசியல் முறையில் ஆறுசட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் மாண்புமிகு அமைச்சராகவும் உள்ளார். இருப்பினும் இம்மாவட்டத்தின் முழு வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், முக்கியத்துவமில்லாத காரியங்களை மட்டுமே செய்து வருவதால், இம்மாவட்டம் காலத்திற்கேற்றற்ப் போன்று, மக்கள்த் தொகைக்கு ஏற்றார்ப் போன்று சமச்சீரான வளர்ச்சி அடையவில்லை.

எனவே மாவட்டத்தின் சமச்சீர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, செயலாக்கம் பெற வேண்டிய சில முக்கிய திட்டங்களை இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு முன்பு நாம் திருவிதாங்கூரில் இருந்த வேளையில், இதே போன்ற திட்டப் பிரேரணைகள் தரப்பட்டுள்ளன. “The South Travancore People’s Economic Development Council” என்ற ஒரு நிபுணர் குழாம் இத்தகையதோர் பிரேரணையைத் தந்ததுண்டு. இக்குழாமில், திருவாளர்கள் T.V. கிருஷ்ண ஐயர், எஸ். நத்தானியேல், எஸ்.சிவராம கிருஷ்ண ஐயர், எஸ்.டி.பாண்டிய நாடார், ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, என்.அகஸ்திய லிங்கம் பிள்ளை, அறிவர் பி. நடராஜன் போன்ற மேன்மக்கள் அடங்கியிருந்தனர். அதற்குப் பிறகு குமரி மாவட்டம் உருவான வேளையிலும் வறண்டப் பூமியான விளவங்கோடு தாலுகாவின் வளர்ச்சியை முன் வைத்து ஒரு திட்டப் பிரேரணையை “The Vilavancode Taluk Welfare Association, Kuzhithurai” என்ற மக்கள் அமைப்பு உருவாக்கித் தந்தது.

மக்களின் இத்தகைய விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இறிகேஷன் திட்டம் போன்றவற்றை வகுத்து செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும் இந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இது தவிர சித்த மருத்துவத்துறையில் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாத்துறையை பொறுத்தமட்டில், நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் திட்ட காலக்கெடுவில் முடிக்கப்பட்டது. மேற்படி திட்டங்களை செய்து தர வேண்டும் என்று மக்கள் தங்களது அமைப்பு வழியாக கோரிக்கை வைத்ததனால் மட்டுமே மேற்படி திட்டங்களை செயல்படுத்தியது தமிழக அரசு.

இன்றைய சூழ்நிலையில், இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நன்மை பயக்கும் பல திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு அரசிடம் உகந்த திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கீழ் விவரிக்கின்ற திட்டங்களை தாமதமின்றி வகுத்து அரசு செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் நெருக்குதல் தர வேண்டும். அவ்வாறாயின் மட்டுமே இவர்கள் அரசுக்கு நெருக்குதல் தருவார்கள். ஒட்டு வங்கிக்காக அரசு செய்கின்ற Populist திட்டங்களால் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படாது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள்:

கன்னியாகுமரி மாவட்டம் 1684 சதுர கிலோ மீட்டர் (1.67,267 ஹெக்டர்) பரப்பளவைக் கொண்ட சிறிய மாவட்டம் ஆகும். தமிழகத்தின் பரப்பளவில் 1.29% மட்டுமாகிய இச் சின்னஞ்சிறிய மாவட்டத்தில் 62,520 ஹெக்டேர் நிலம் நெற் பயிருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு தற்சமயம் சுருங்கி விட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளது என்றா லும் இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று பாசன வசதிக் கொண்ட வயல்களில் ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் போன்ற பணப் பயிர்கள் நடவு செய்து அதை தோட்டங்களாக மாற்றப்பட்டதாகும். இரண்டாவது இந்த விளை நிலங்களை வேண்டுமென்றே தரிசு நிலங்களாக மாற்றியமைத்து அங்கே வீடுகளும், கல்வி நிலையங்களும், வியாபார கூடங்களும் கட்டியதுமாகும். பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த வியாபாரிகளும், உத்தியோகஸ்தர்களும் மற்றும் வெளி மாநிலத்து வசதிப்படைத்தவர்களும் இம்மாவட்டத்தில் தங்கு தடையின்றி குடியேறி வீட்டுமனைகளை அபரிமித விலை கொடுத்து கிரயம் பெற்று வீடுகள் கட்டி வருவதால் வயல்வெளிகள் விரைவாக சுருங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால், குமரி மாவட்டத்தில் உணவு உற்பத்தி இல்லை என்ற நிலை உருவாகிவிடும். இந்த நிலையை தடை செய்திட வேண்டும். இந்த நோக்கில் கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சில உருப்படியான நடவடிக்கைள் எடுத்து வருகின்ற போதிலும் அவைகளை மேலும் கடுமையாக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தில் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இம்மாவட்டத்தில் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் அதாவது 1956-ம் நவம்பர் 1-ம் நாள் குடியிருந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் போன்றோர் மட்டுமே சொத்துக்களை கிரய விக்கிரயம் செய்யலாம் என்ற ஒரு சரத்தை உருவாக்குவதன் மூலம் இந்த குடியேற்றக்காரர்களின் பிடியிலிருந்து இம் மாவட்ட பாசன நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.

இம்மாவட்டம் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கின்ற ஒரு மாவட்டமாகும். 75 விழுக்காடு மக்களும் நடுத்தர மற்றும் சிறிய விவசாயிகள் ஆவர். விவசாயத்தைச் சார்ந்த பணியாளர்களும் இங்கே அதிகம் உள்ளனர். எனவே இவர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு, வயல்நிலைகளை வேறு உபயோகத்திற்காக பயன்படுத்துவததை நிரந்தரமாக அரசு தடை செய்திட வேண்டும். இம்மாவட்டத்தில் சுமார் 950 விவசாயக் குளங்கள் மன்னர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் பரப்பளவும் ஆழமும் தேவைக்கேற்றபடி அன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பல குளங்களை நிரத்தி மாற்றுத் திட்டங்களுக்காக அவைகளை அரசே பயன்படுத்திவிட்டன. எஞ்சியவைகளில் தாமரைச் செடியை பஞ்சாயத்துக்கள் பயிரிட்டு, அதன் மூலம் வருவாய் தேடுகின்றனர். தாமரை பயிரிடுகின்ற குளங்கள் தற்சமயம் முற்றிலும் தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே தாமரைச் செடிகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதற்கென திட்டம் ஒன்றை அரசு வகுத்து, போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். கீழ் குறிப்பிடுகின்ற விவசாய நோக்குடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு உடனடி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் இந்த திட்டங்களுக்கு மட்டுமே, தங்களது தொகுதி வளர்ச்சி நிதியை செலவிட வேண்டும்.

1. நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத் திட்டம் நிறைவேற்றுதல்:

இந்த கால்வாய் கேரள எல்லையில் கட்டப்பட்டிருக்கின்ற நெய்யாறு அணையில் இருந்து, தமிழ்நாடு எல்கையில் வருகின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப்பாகப் பாசனத்துக்கான இருநாட்டு அரசுகளின் பங்கில் உருவாக்கப்பட்டதாகும். நெய்யாறு அணையின் நீர் பிடிப்பு இடங்கள் கேரள மாநிலத்திலும், தமிழ்நாடு மாநிலத்திலும் பரந்து கிடக்கின்றன. ஆகையால் இதை இரு மாநில அணைத் திட்டம் என்று கருதுவதே சரியானதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, இடதுகரை கால்வாய் வெட்டப்பட்டது.

நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் மொத்த நீளம் 38.4 கிலோ மீட்டர்கள். இதனால் 4,048.58 ஹெக்டேர் (10/000 ஏக்கர்) நஞ்சை நிலம் பாசன வசதி கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கால்வாயால் வறட்சியில் சிக்கித் தவிக்கின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப் பாகத்திற்கு பாசன வசதி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த அணையால் கேரளத்தில் 9757.09 ஹெக்டேர் நஞ்சை நிலங்களும், தமிழ்நாட்டில் 4048.58 ஹெக்டேர் ஆயக்கட்டு நஞ்சை நிலங்களும், பாசனவசதி கிடைக்கும். இந்த அணையால் தமிழ்நாட்டை விட சுமார் இரண்டு மடங்கிற்கு மேலாக கேரளத்தில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் இந்த அணையை கட்டி முடிப்பதற்கும், கால்வாய் வெட்டுவதற்கும் மொத்தம் 143 லட்சம் ரூபாய் அன்று செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்காக ரூ.60 லட்சங்கள் 1963-ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கோப்புச் சொல்லுகிறது. இது தவிர விளவங்கோடு தாலுகாவில் வெட்டப்பட்டுள்ள கால்வாய்க்கு ரூ.92.28 லட்சம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. (பார்வை Kanyakumari District Gazetteer – 1995 – Page 306).

விளவங்கோட்டில் வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய், நெய்யாறு இடதுகரை கால்வாயில், பாறச்சாலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1½ பர்லாங் வடக்காக முள்ளுவிளை வார்டில் மாத்திரக்காவிளையில் தொடங்கப்பட்டுள்ளது. கேரளப் பகுதியில் செல்லுகின்ற பிரதான கால்வாயின் ஒரு சிறிய கிணைக் கால்வாயாகத்தான் இதை வெட்டியுள்ளதால் இதில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே வரும்படியாக அங்கே இரு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இக்கிளை பிரிகின்ற பிரதான கால்வாயில் ஷட்டர் எதுவும் அமைக்கப்படவில்லை. இங்கே செல்லுகின்ற பிரதான கால்வாயில் இருந்து சுமார் 4 அடி தாழ்வாகத்தான் தமிழ்நாட்டுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால் அது பிற இடங்களில் அதளபாதாளத்திலூடே செல்ல வேண்டியதாயிற்று. அந்த 4 அடி தாழ்வை தவிர்த்து மெயின் கால்வாய் சமதளத்தைத் தொடர்ந்து வெட்டியிருந்தால் கூட இங்கே வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய் சுமார் 10’ அடி வரை உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கலாம். அதனால் மேட்டுப்பாகங்களுக்கும் பாசனம் கிடைத்திருக்கும். எனவே இது ஒரு தவறான கால்வாய் அமைப்பு முறை (Defective Civil Engineering) என்று கூடக் கருதலாம். இந்த மாத்திரக்காவிளை இடம் கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கால்வாய் “சுந்தரிமுக்கு” என்ற இடத்தில்தான் உட்புகுகின்றது. இந்த சுந்தரிமுக்குக்கும், மாத்திரக்காவிளைக்கும் சுமார் 1½ பர்லாங் தூரம் உண்டு. அந்த இடத்தை நில உடமைகளிலிருந்து தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அறிகிறோம்.

இடதுகரைக்கிளைக் கால்வாய் வெட்டும் பணி 1959 ஜுலை மாதம் 27-ம் நாள் தொடங்கப்பட்டு 25.04.1963 அன்று தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் திரு.காமராசர் திறந்து வைத்தார். இக்கால்வாயால் மேற்கு விளவங்கோடு தாலுகாவின் முக்கிய குளங்களை மட்டும் இணைத்து தண்ணீர் பாய்ச்சுகிறது. இதனால் ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இருப்பினும் இக்கால்வாய் மிகவும் ஆழமாக வெட்டப்பட்டமையால் மேட்டுப்பகுதி பாசனத்துக்கு இது பயன்படவில்லை. எனவே இக்கால்வாய் வடிவமைத்ததில்Technical Flaw காணப்படுகின்றது.

இடதுகரைக் கால்வாய் தமிழ்நாட்டு எல்லையில் இரண்டு இடங்களைக் கடந்து செல்கிறது. இதில் முதல் இடம் பண்டாரக்கோணம் என்ற ஊராகும். இரண்டாவதாக, இது ஆலம்பாறை என்ற இடத்தில் கடந்து, மீண்டும் கேரள எல்லைக்குள் செல்கிறது. இவ்விடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் கேரள எல்கையான மாத்திரக்காவிளையில் கிளைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், சுமார் ஒன்றரை பர்லாங் தொலைவுக்கு தமிழ்நாடு அரசு பொன்னும் விலையும் கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. இதில் முதல் இடமான பண்டாரக்கோணம், மாத்திரக்காவிளையில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் வடக்காக உள்ளது. இந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு இடதுகரை கால்வாயைத் தொடங்கியிருப்பின் கால்வாயின் ஆழம் சராசரியாக 50 அடியாவது குறைந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு வெட்டப்பட்டிருந்தால் ஒரு வேளை சில தொட்டிப்பாலங்களும், சுரங்க அமைப்புகளும் கூடுதலாகத் தேவைப்பட்டிருக்கும். இதனால் மேட்டுப்பகுதி பாசனமும் கிடைத்திருக்கும். சிலவு சற்று கூடுதலாக இருந்தாலும், அதன் பயன்பாடு பெரிதாக இருந்திருக்கும். இவ்விடங்களில் இரப்பர் தோட்டங்களும், நெல் வயல்களும் புதிதாக உருவாகி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த வளர்ச்சியை, எதிர்பார்த்த பயன் தராத நிலையில் கால்வாய் வெட்டுவதற்குக் காரணமாக இருந்த அந்நாள் பொறியாளர்கள் உருவாக்கி விட்டனர். இதற்கு ஏதாவது அரசியல் பின்னணி கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

தற்பொழுது இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதை பலகாலங்களாக தூர்வாரிப் பராமரிக்காமல் PWD இலாகா விட்டுவிட்டது. தவிரவும் கேரள அரசு பல்லாண்டுகளாக இக்கால்வாயில் தண்ணீர் விடாமல் தடுத்துவிட்டனர். எதற்காக தண்ணீர் தரவில்லை என்று தமிழக அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆய்ந்தறியவில்லை. இதற்கு கேரள அரசு தமிழக அரசு மீது பழி சுமத்துகின்றனர். தண்ணீர் செஸ் (Cess) ஆக கேரளத்துக்கு தமிழகம் ரூபாய் 20 கோடி நிலுவையாக உள்ளது என்றும், பராமரிப்புக்கான பணம் கூட தரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இது உண்மையா அல்லது புரளியா என்று கூடத் தெரியவில்லை. தமிழக அரசும் இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவுமில்லை. உண்மை எதுவானாலும், விளவங்கோடு மேற்குப்பாக விவசாயிகளுக்கு இந்த நெய்யாறு இடதுகரைக் கால்வாயால் எப்பயனும் இல்லை என்ற உண்மை நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசின் நிற் விசாரத்தன்மையால் உருவாகிவிட்டதாக அவ்வட்டார மக்கள் கருதுகின்றனர். எனவே இவ்வாட்டார விவசாயிகளின் நன்மையைக் கருதி இந்த இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத்திட்டம் ஒன்றை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

02.09.2010 அன்று நடந்த குமரிமாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திரு.முத்துசாமிகுமாரன் பேசுகையில், நெய்யாறு இடதுக்கரைப் பாசனத்திற்காக மாற்றுத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார். அவர் அறிவிப்புப்படி திற்பரப்பிலிருந்து வலதுகரை சானல் ஒன்று வெட்டி, நெய்யாறு இடதுகரை கால்வாயுடன் இணைத்துவிட்டால் மேற்கு விளவங்கோடு பாசனம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். இதனாலும் நெய்யாறு இடதுகரைச் சானலின் உயரம் கூடுவதற்கு வழியில்லை. திரும்பவும் அந்த அதளபாதாளநிலைதான தொடரும். இந்த கால்வாயால் பழைய பாசனக் குளங்களில் சிலதுகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்குமே தவிர இன்று மேட்டுப்பாகங்களாக வறண்டு கிடக்கின்ற பூமிக்கு பாசன வசதி கிடைக்காமல் போகும்.

எனவே புதிதாக தொடங்க திட்டமிட்டுள்ள திற்பரப்பு திட்டத்துக்கு பதிலாக சிற்றார் II நீர் தேக்கத்திலிருந்து உயர்வான பாகம் வழியாக புதிய கால்வாய் அமைத்தால் மேட்டுப்பாக பாசனம்(Highland Irrigation) கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சிறிய தொட்டிப்பாலங்களும், குழாய் சுரங்கங்களும் இதற்குத் தேவைப்படும். நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமே. கங்கை நதியிலிருந்து, காவிரிக்கு கால்வாய் வெட்ட முடியுமென்றால், ஆழ்கடலில் சேதுக்கால்வாய் அமைத்திட முடியுமென்றால், இந்த திட்டம் வெகுசுலபமாக நிறைவேறிவிடும்.

இந்த திற்பரப்பு கால்வாய் திட்டம், 1879-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் ராமவர்மா காலத்தில் (1860-1880) திவானாக இருந்த இராமையர் அமல்படுத்த எண்ணினார். அதற்காக மதிராசி P.W.D. இலாகாவில் முதல் நிலை பொறியாளராக பணியாற்றி இருந்த கொளேனால் மீடு என்பவரை வரவழைத்து ஆய்வு நடத்தியதாகவும், அதன் சாத்தியக்கூறு சுலபமானது இல்லை என்று கண்டு கைவிடப்பட்டதாகவும் அறிகிறோம். (Travancore State Manual – III by T.K. Velupillai page – 416). எனவே, தமிழக எல்லைக்குள் இருக்கின்ற நெய்யாறு அணை நீர் பிடிப்பு பாகங்களில் மழைகாலங்களில் உருவாகின்ற தண்ணீரை தடுப்புக்கால்வாய் மூலம் விளவங்கோடு மேற்குப் பகுதிக்கு திசை மாற்றி பாசனம் செய்தால் அதிக பயன் உள்ளதாக இருக்கும். இந்த மாற்றுத் திட்டத்தை அரசு பாpசீலிக்க வேண்டும் என்று வேண்டுகிறேhம். இது குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு நெருக்குத்தல் தந்து திட்டத்தை நிறைவு பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆகையால் நஞ்சை நிலங்களும், பாசனக்குளங்களும் மாற்றுத் தேவைகளுக்கு மாற்றப்படுவதை சட்டத்தால் நிரந்தமாக தடை செய்து, உணவு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதற்க்கு கீழ் சொல்லப்படுகின்ற நீர்பாசனத் திட்டங்களை உடனடியாக உருவாக்கிட வேண்டும்.

விவசாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்பட வேண்டிய முக்கிய புதுத் திட்டங்கள்:

1. முடங்கிக் கிடக்கின்ற நொய்யாறு இடதுகரை கால்வாய்க்கு மாற்றாக சிற்றாறு II நீர்த் தேக்கத்திலிருந்து புதிதாக கால்வாய் வெட்ட வேண்டும். 2. குமரிமாவட்டத்தில் உள்ள பாரம்பாpய விதைகனை பாதுகாத்தல் 3. நஞ்சை நிலங்களை மற்ற காரியங்களுக்காக மாற்றுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். 4. பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளம் மற்றும் வடநாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியேறுவதை தடை செய்து, அவர்கள் நிலம் வாங்குவதை நிரந்தரமாக தடை செய்திட வேண்டும்.

2. ஏ.வி.எம். கால்வாயை கன்னியாகுமரி வரை வெட்டி நீட்டுதல்:

அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நொக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தெக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐ “It is to be regretted that the necessity arose for suspending the extension of the Southern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. The Wurkullay (வர்கலை) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory if provision could have been made for simulataneoulsy carrying on both the works. But it seems that it could not be made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a position to resume erelong the work suspended”. (V. Nagam Aiya – The Travancore State Manual – Vol.III Page 231 & 232)

வர்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அஙகிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி பொக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.

இந்த திட்டம் நிறைவெறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த நீர்வழி பொக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.

இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

“There are proposals to examine how best this Inland water way can be developed” (Second F.Y.P. (1956‐61) K.K. District – Page – 53) இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐

1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபோக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும். 2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். 3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும். 4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும். 5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்:
வேண்டுகோள்:

1. ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திடத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும். 2. சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹேலன் டெவிட்சன் அம்மையார் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும். 3. வள்ளியூரில் சர்வதேச விமானதளம் அமைத்தல்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றும் தொழில்துறையில் பிற மாவட்டங்களைப் போன்று இதுகாறும் முன்னேறவில்லை. வெளிநாட்டு முதலீடுகளும் இம்மாவட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர் வசதியாக வந்து போவதற்கு பன்னாட்டு விமானதளம் அங்கே இல்லாததேயாகும். சென்னையை எடுத்துக்கொண்டால் பன்னாட்டு விமானதளம் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாரளர்கள் புதிய புதிய தொழில்கள் தொடங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றனர். அதனால் பல்வேறு ரக பன்னாட்டு தொழில்கள் அங்கு தொடங்கப்பட்டு அனேகர் பயன்பெறுகின்றனர். சென்னை பெருந்தொழில் நகரமாக உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருப்பதேயாகும். ஆனால் தென் மாவட்டங்களில் இத்துறையில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. இருப்பினும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் இங்கேதான் அதிகமாக உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களும் அதிக அளவில் இங்கே உருவாகி வந்தாலும் இவர்கள் அனைவரும் வேலைக்காக சென்னைக்குதான் படை எடுக்கின்றனர். பன்னாட்டு விமானதளம் இல்லாதகுறையால் மட்டுமே பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற “நாங்குநேரி தொழில்பூங்கா” மற்றும் “நாகர்கோவில் ரப்பர் பூங்காக்கள்” பூக்காமலும் காய்க்காமலும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

ஆகையால் தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இம்மூன்று மாவட்டங்களின் நடு நாயகமாக விளங்குகின்ற வள்ளியூரில் ஒரு பன்னாட்டு ஜம்போ விமானதளம் அமைக்க வேண்டும். பன்னாட்டு ஜம்போ விமான தளத்தக்கு நீளமான ஓடுதளம் தேவை என்பதால் இதை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் சிறிதளவு கூட இல்லை. வள்ளியூர்ப் பகுதியில் சமநிரப்பான தாரிசு நிலங்கள் எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன. ஆகையால் இந்த பிரதேசம் பன்னாட்டு ஜம்போ விமானநிலையத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். நீள ஓடுதளங்களை அமைப்பதற்கு இயற்க்கையாக சமநிரப்பு நிலம் இங்கே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏனவே இதுகுறித்து நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.

இதனால் இம்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் குறிப்பாக IT பூங்காக்கள், உணவு வகைகள் பதனிடும் பூங்காக்கள் போன்ற நவீன தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இம்மாவட்டஙகளில் படித்த வேலையில்லாமல் இருக்கின்ற தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தவிரவும் இங்கே விளைகின்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப்பொருட்கள், கடல் மீன்கள் போன்றவைகளை இங்கிருந்து நேரடியாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விவசாயிகள் அதிக பயன்பெறவும் வழிவகுக்கும். இப்போது இப்பொருட்களை கேரளமானிலம், திருவனந்தபுரம் விமானநிலையம் வாயிலகத்தான் தமிழக வியாபாhpகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

4. சுற்றுலா வளர்ச்சி:

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு அழகிய மாவட்டம். நீர்வளமும் நிலவளமும் மலைவளமும் ஒருங்கே அமையப்பெற்று கண்ணுக்கினிய இயற்கை வனப்புகளை அள்ளித்தருகின்ற ஒரு சிறிய நாடுபோல் காட்சி தருகிறது. இது பண்டைக் கால ஆய்நாட்டின் தென்பாங்களையும் நாஞ்சில் நாட்டை முழுமையாகவும் உள்ளடக்கிக்கொண்டு உலாவருகின்ற ஒரு அழகிய நாடாகும். தமிழ் இலக்கியங்களில் வகுத்துக் கூறப்பட்டிருக்கின்ற முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற நான்கு திணைகளைக்கொண்ட தமிழ் நிலமாகவும் இம்மாவட்டம் திகழ்கின்றது. ஆகவே இயற்கை அன்னையின் எழில் மிகு சுகவாசஸ்தலங்கள். இன்னும் பல, சுற்றுலா மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படாமல் உள்ளன. அவைகளையும் சீரமைத்து சாலை வசதிகளை மேம்படச் செய்தால் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். இத்தகைய இடங்களின் விவரங்கள் கீழ்தரப்படுன்றன.

i. முத்துக்குழிவயல் கோடை வாசத்தலம்:

இந்த குளிர்ச்சியான இடம் பெருச்சாணி நீர்தேக்கத்திற்கு மேலாக பாலமூர் தோட்டத்துக்கு வடகிழக்காக சுமார் 8 கி.மீ. தோலைவில் அமைந்துள்ளது. பறளி ஆறு இந்த இடத்தில் தான் உற்பத்தியாகிறது. சிலுசிலுத்தோடுகின்ற ஓடைகளை உள்ளடக்கி ரம்மியமான தட்பவெட்பம் கொண்ட குளு குளு இடமாகவும் இது அமைந்துள்ளது. கன்னியாகுமரியின் குற்றhலம் “திற்பரப்பு” நீர்வீழ்ச்சி என்றால், முத்துக்குழிவயல் கன்னியாகுமரியின் “கொடைக்கானல்” என்று வர்ணிக்கலாம். திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைகால வாசஸ்தலமாகவும் இது இருந்துள்ளது. அவர்கள் தங்குவதற்கென்று ஒரு கண்ணாடி மாளிகையும் அங்கேகட்டப்பட்டிருந்தது. இங்கே சிறுரகவிமானங்களும், கெலிக்காப்டரும் இறங்குவதற்கு வசதியாக ஒரு சமநிலைப்பரப்பு காணப்படுகிறது. இங்குச் செல்வதற்கு வசதியான சாலை பாலமூர் தோட்டம் வரை தனியார் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துநநி தடம் உள்ளது. அதை அரசோ அல்லது தனியார்களோ செம்மைப்படுத்தவில்லை. இந்த முத்துக்குழிவயலில் அனைத்து நவீன வசதிகளை உருவாக்கித்தந்து மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் இது நம்மாவட்டத்தின் “கொடைக்கானலாக” உருவாகும். இதனால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து. வருவாயும், வேலைவாய்ப்பும் பெருகும்.

ii. அணைகள் காட்சிக்கோபுரம் (Dam View Tower) அமைத்தல்:

கன்னியாகுமாp மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவைகள் முறையே பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மற்றும் சிற்றாறு-2 ஆகும். இது தவிர கேரள மாநிலத்தில் நெய்யாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. இவைகளையெல்லாம் ஒரே இடத்தில் இருந்து வெறும் கண்ணால் பார்ப்பதற்கு, இயற்கை ஒரு இடத்தை நமக்கு அன்பளிப்பாக அளித்துள்ளது. இந்த இடம் களியலிலிருந்து மருதம்பாறை செல்லுகின்ற பாதையில் “ஆனைநிரத்தி” என்ற இடமாகும. இந்த இடம் சற்று மேட்டுப்பாகமாக இருப்பதால் இங்கிருந்து பார்ததால் மேற்படி ஐந்து அணைகளையும் காணமுடிகிறது. இதில் ஒரு பார்வை கோபுரம்(Dam View Tower) அமைத்து அதில் தொலைநோக்கி உபகரணத்தையும் பொருத்திவிட்டால் தென்மானில ஐந்து அணைக்கட்டுகளை சுற்றுலாப்பயணிகள் ஒரே இடத்தில் இருந்து கண்டு பயன்பெறுவர். அதனால் அரசுக்கு அதிக வருவாயும் கிடைக்கும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அதிக வேலைவாய்புகளும் கிடைக்கும்.

iii. கோதையார் வாசஸ்தலம்:

இங்கேதான் கோதையாறு உற்பத்தியாகிறது. குளிர்ச்சியான இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்காக அனைத்து இயற்கைச் சூழல்களும் இங்கே காணப்படுகின்றன. இதமான தட்பவெட்பம், சமநிலம் நான்கு பக்கமும் உயர்ந்த குன்றுகள் போன்றவைகள் உள்ளன. அரசு இந்த இடத்தை மேம்படுத்தி இதை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக அமைத்திடவேண்டும். ஏனவே இந்த மூன்று இயற்கை இடங்களை மேம்படுத்தி நல்ல சாலை வசதிகைளயும் பிற அடிப்படை வசதிகளையும் உருவாக்கினால் இவ்விடங்கள் புகழ்மிக்க சுற்றுலா தலங்களாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எடுத்துக்கூறி நெருக்குதல் தந்து இவ்விடங்களை புகழ்மிக்க சுற்றுலாத்தலங்களாக உருவாக்கிட வேண்டும். மக்களும் இவர்களுக்கு நெருக்குதல[ தரவேண்டும்.

1. கன்னியாகுமரியிலிருந்து – திருவனந்த்புரம் வரை கடல் மார்க்கம் படகு போபாக்குவரத்து விடுதல் 2. குமபோ மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களை பார்க்கும் போருட்டு சுற்றுலா தினசரி பேக்கேஜ் அமைத்தல் (இந்த வசதி கோவாவில் தற்போபாது உள்ளது)

தொழில் பூங்காக்கள் அமைத்திட வேண்டும்:

தொழில் துறையில் குமரிமாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது. அரசால் இரண்டு தொழில் பேட்டைகள் தொடங்கப்படிருந்தும் அதில் காணுகின்ற தொழிறகூடங்கள தொழில்கள் அல்லாத துறைகளுக்கு ஒதுககியிருப்பதால தற்போது தொழில் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் பேட்டைகளில் தொழில் அல்லாத காhpயங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பேட்டைகளிலிருந்து அவைகளை காலி செய்துவிட்டு தொழில் முனைவோருக்கு அவைகளை அளிக்கவேண்டும்.

அ. புதிய முந்திhpப்பருப்பு ஆலைகள் தொடங்குவதை தடை செய்யவேண்டும்:

சுற்றுச்Nழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான தொழில்கள் இம்மாவட்டத்தில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே இங்கே செயல்பட்டு வருகின்ற பலநு}று முந்திரிப்பருப்புத் தொழிற்சாலைகளால் காற்று மண்டலம் மாசுப்பட்டுவிட்டது. இதிலிருந்து வரும் புகையில் கலந்து காற்று மண்டலத்தில் பரவுகின்ற முந்தரி எண்ணெய் துகல்களால் மரங்களும் மனிதர்களும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புகையால் மனிதர்களின் நுரையீரல், லிவர் மற்றும் இருதயம் பாதிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நோய்யால் பாதிக்கப்பட்ட பலர் இன்று மருத்துவமனைகளில் சிகிட்சை பெற்று வருகிறhர்கள். இந்த எண்ணெய் படலத்தால் தாவரங்களின் வளர்ச்சியிலும் காய்ப்புத்தறின்களிலும் பாதிப்புகள் உருவாக்கியுள்ளன. ஏனவே இவைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

ஆ. ரப்பர்பூங்கா தொடங்குவதை தவிர்க்கவேண்டும்:

செண்பகராமன்புதூரில் ஒரு “ரப்பர் பூங்கா” தொடங்குவதாக பல காலங்கள் பேசப்படுகின்றன. பூங்கா நிறுவப்பட்டால் பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களால் இயற்கைச் Nழலை மாசுப்படவைக்கின்ற கந்தகம் (ளரடphரச) கரித்தூள் (ஊயசbடிn னுரளவ) அமிலங்கள் (Aஉனைள) மற்றும் ரசாயணங்கள் (ஊhநஅiஉயடள) உபயோகப்படுவதால் அவைகள் அனைத்தும் காற்று மண்டலத்தையும் நீர் ஆதாரங்களையும் நிலத்தின் தன்மைகளையும் மாசுபடுத்தும். எனவே இந்த ரபபர் பூங்காவிற்கு பதிலாக ஒரு ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இம் மாவட்டக்காரர்களுக்கு இங்கேயே வேலை கிடைப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே அரசு இந்த ரப்பர் பூங்காவிற்குப் பதிலாக அதே வளாகத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இ. உணவு பதனிடும் தொழில்:

இம்மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பல்வேறு காய்கனிகளை மூலப்பொருளாக பயன்படுத்தி உணவு பதனிடும் தொழில்கள் உருவாக்குவதற்கு தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்.

ஆகையால் கீழ்குறிக்கின்ற தொழில்களை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.

1. காற்று மண்டலத்தை மாசு படுத்துகின்ற விதத்தில் பழைய தொழில்நுட்பத்தில் புதிதாக தொடங்கும் முந்திhpப் பருப்பு ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2. சென்பகராமன்புதூரில் பல காலங்களான தொடங்ப்படாமலிருக்கின்ற ரப்பர் பூங்காவை ரத்து செய்துவிட்டு அவ்விடத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். 3. காய்கனிகளை பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும். 4. தேங்காய் பவுடர் தயாhpக்கும் தொழில் மேலும் தொடங்கலாம்.

விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க வேண்டும்:

குமரி மாவட்டம் முழுக்கவும் விவசாயத்தைச்சார்ந்த ஒரு மாவட்டமாகும். இங்கே பயிரிடப்படாத பயிர்களோ, காய்கனிகளோ செடி கொடிகளோ இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் நவ{னதொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை. பழைய முறைகளையும், புதிய ரசாயன உரங்களையும் பயன்படுத்தித்தான் விவசாயம் நடக்கிறது. எனவே இம்மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சிக்காக ஒரு விவசாயக் கல்லூரி தொடங்க வேண்டும். விவசாயத்தில் முனைவர் படிப்பை முன்னிறுத்தி, ரப்பர் ஆராய்ச்சி, தோட்டக்கலை ஆராய்ச்சி, வனவள ஆராய்ச்சி, போன்ற ஆரய்ச்சி பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். மீன் வள கல்வி ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசரி செய்து தரவேண்டும்.
குமரி மாவட்டத்தில் திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர் தெற்கே பார்த்தால் கடலில் தண்ணீர், மேற்கே பார்த்தால் அங்கேயும் தண்ணீர். கிழக்கே நாஞ்சில் நாடு. திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர், வடக்கே செல்ல வேண்டாம். தண்ணீரைத் தேக்கி வைக்கின்ற நான்கு அணைகள். அங்கேயும் தண்ணீர். ஆனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை. ரசாயனத் தண்ணீர்தான் குடிக்க வேண்டும். பாதுகாப்பில்லாத தண்ணீர் தான் குடிப்பதற்கு நமக்கு அது தருகிறது. அனைத்திலும் யூரியா கரைத்த தண்ணீர். கால்வாயில் யூரிய கலந்த தண்ணீர் குளத்தில் யூரிய தண்ணீர். குழாயில் யூரியா கலந்த தண்ணீர். எப்படி இவைகளில் எல்லாம் யூரியா கலக்கிறது?.

ரப்பர் தோட்டங்களுக்க போடப்படுகின்ற யூரியா கலவை (ரப்பர் உரம்) மழைத் தண்ண{ரில் கலந்து கால்வாய், குளம், குட்டைகள் மற்றும் ஆற்று நீரில் கலந்து விடுகிறது. இந்த தண்ணீரையே நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் குழாய் மூலம் மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். அப்படி விநியோகிக்கின்ற தண்ணீரைச் சுத்தம் செய்து ய+ரியா போன்ற மற்ற ரசாயனங்களை பிரித்தெடுத்து பாதுகாக்கப்பட்ட தண்ணீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு உடல் கோளாறுகள் உருவாகி மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு திருவிழாக்கூட்டமாக கூடிக்கிடக்கிறார்கள்.

எனவே, நகராட்சிகளில், பேரூராட்சிகளில் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வினியோக அமைப்புகளை திருத்தி அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகித்திட வேண்டும். நாகர்கோவில் நகராட்சியைப் பொறுத்த மட்டில் அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற சுத்திகரிப்பு நிலையம் உதவியுடன் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் நகராட்சிக்கு தண்ணீர் தருகின்ற முக்கடல் அணை முற்றிலும் தூர்ந்த நிலையில் இருப்பதால் அதன் நீர் கொள்ளளவு கணிசமான அளவிற்கு குறைந்து விட்டது. தவிரவும் இந்த அணை 1981-ம் ஆண்டு குமரித்தந்தை மார்ஷல் எ. நேசமணி அவர்கள் நாகர்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் வேளையில் திவான் சர். சி. பி. ராமசுவாமி ஐயரிடம் முறையிட்டு பெற்றதாகும். அன்று காலப்பட்ட மக்கள் குடியிருப்புக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் உருவாக்கப்பட்டதாகும். இன்று மக்கள் பெருக்கமும் குடியிருப்பு பெருக்கமும் பல மடங்கு பெருகிவிட்டாலும், தண்ணீர் வழங்குகின்ற அமைப்பு அவ்வாறே தான் உள்ளது. அந்த அணையை விரிவுப்படுத்தவோ, ஆழப்படுத்தவோ, தூர்வாரவோ அல்லது நவீனப்படுத்தவோ செய்யாத நிலையில் நகரின் தண்ணீர் தேவையை சுத்தமில்லாத தண்ணீர் வினியோகத்தில் சமாளிக்கின்றனர்.

இந்த நகராட்சியின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் உலக்கை அருவி நீர் சேமிப்புத்திட்டம் ஒன்று வரையப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நஉழழெஅiஉயடடல ழெவ கநயளiடிடந என்றுக் கூறிக்கைவிடப்பட்டது.

அதனால் நகர மக்கள் கோடை காலங்களில் தண்ணீருக்காக பேயாய் அலைகின்ற அவல நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த உலக்கை அருவித் திட்டத்துக்கு மாற்றுத் திட்டம் தீட்டப்படவேண்டும் தவிரவும் முக்கடல் அணையை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரி சுத்தப்படுத்தி அதன் கொள்ளளவை மும்மடங்காக்கி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை அரசு உடனே களைந்திடவேண்டும். இதே போன்று பத்மனாபபுரம் நகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் குழித்துறை நகராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நீர்த்திட்டங்கள் உருவாக்கிட வேண்டும். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் கூட்டு குடிநீர்த்திட்டங்கள் அறிமுகப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க வேண்டும்.

ரெயில்வே துறை வளர்ச்சி:

குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன. திருவனந்தபுரம் கோட்டத்தில் 650கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ தொலைவு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் இல்லை. இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் மலையாளி ஆதிக்கத்திலிருந்து விடுபட வில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம். இது மலையாளி ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்துவிட்டதை பொறுக்க முடியாமல் கடும் வைராக்கியத்துடன் பல்வேறு வழிகளில் குமரி மாவட்ட மக்களை பழிவாங்குகின்றனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள்.

இரண்டாவதாக இங்கிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் குமரி மக்களின் பயன்பாட்டை நிராகரித்து, மலையாளிகளின் வசதியை மையமாக வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் மற்றும் செல்லும் திசைகள் குமரிமக்களுக்குப் பாதகமாகவும் கேரளா (மலையாளி) மக்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குமரி மாவட்டத்துக்குள் வந்து ரயில் நிலையங்களில் ரயில்கள் தங்கி கேரளத்தவரின் வசதிக்காக ஓடுகின்றன. காரணம் திருவனந்த புரத்தில் நிறுத்தி வைக்க இடம் இல்லை.

இந்நிலையை சீர் செய்ய ரயில் பயணிகள் இணைந்து சங்கம் அமைத்தார்கள். சங்கங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. குமரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பிளாட்பாம் மாற்றத்துக்கு எடுத்த முயற்சி கூட தோல்வியில் முடிந்தது. குமரி மாவட்டத்தைப் பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கால கட்டம் வந்தது போல குமரி மாவட்ட ரயில் நிர்வாகத்தை கேரளாவிலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. பயணிகள் சங்கங்களும், எம்.எல்.எ., எம்.பி.யும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து போராடாமல் எதுவும் நடக்கப் போவதில்லை. போராடுவார்களா?

கீழ்குறிபிடபட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே ரயில்வே துறையில் குமரி மாவட்டம் தன்னிறைவு பெறும். கூடுதல் ரயில்கள்.

புதிய ரயில்கள்:

1. நாகர்கோவிலிருந்து – சென்னைக்கு முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய தினசரி ரயில் 2. கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் 3. கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், காரைக்குடி, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் ரயில்கள் நீட்டிப்பு 4. திருவனந்தபுரம் - மங்களுர் 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்குதல் 5. நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு இரயிலை ஒரு மார்க்கத்தை வாஸ்கோடகாமா(கோவா) வரை நீட்டிப்பு செய்தும் மறுமார்க்கத்தை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்தும் கன்னியாகுமரி - வாஸ்கோடகாமா(கோவா) எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க கோரிக்கை 6. திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு 7. திருநெல்வேலி – தாதர் வாரத்துக்கு மூன்றுநாள் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு சேவைகளை அதிகரித்து இயக்குதல்: 8. கன்னியாகுமரி – புதடில்லி வாரத்துக்கு இரண்டுநாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 9. கன்னியாகுமரி – புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 10. கன்னியாகுமரி – ஹவுரா வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 11. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் கேரள வழியாக சுற்று பாதையில் செல்லும் ரயில்களுக்கு பதிலாக குறைந்த தூரம் கொண்ட தமிழக நகரங்கள் வழியாக ரயில்கள் இயக்க கோரிக்கை 12. சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் வாராந்திர சூப்பர்பாஸ்டு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு 13. சென்னை எழும்பூர் - திருபுகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு 14. சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் வாராந்திர சூப்பர்பாஸ்டு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு 15. திருநெல்வேலி – ஜம்முதாவி வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலை நாகர்கோவில் வழியாக ஒரு நாள் கன்னியாகுமரிக்கும் ஒரு நாள் திருவனந்தபுரத்துக்கும் நீட்டித்து இயக்க வேண்டும். 16. கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்:-

கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் தினசரி ரயில் கேரளா வழியாக சுற்றி பயணநேரம் 47 மணி நேரம் எடுத்து கொள்கிறது. இதே மும்பைக்கு மங்களுர் வழியாக இயக்கப்படும நாகர்கோவிலிருந்து செல்லும் ஹாப்பா ரயிலில் 28மணி 15 நிமிடங்களில் சென்று விடலாம். ஆகவே இந்த கன்னியாகுமரி – மும்பை ரயிலின் வழித்தடத்தை மாற்றி கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களுர், மட்கான் வழியாக இயக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கிய வழி தடமாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மி பகுதி அமைந்துள்ளது. இந்த வழி தடத்தில் தற்போது சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு 56 கி.மி மற்றும் மதுரை – திண்டுக்கல் 66 கி.மி வழி தட பகுதிகள் மட்டுமே இருவழித் தடமாக மாற்றபட்டுள்ளது. மீதமுள்ள 620 கி.மீ பகுதிகள் அனைத்தும் ஒரு வழி பாதையாகவே உள்ளன. ஆகவே உடனடியாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மீ வழி தடம் இருவழிப்பாதையும் மின்சார மயமாக ஆக்கபடவேண்டும்.

நாகர்கோவில் நகரில் மெட்ரோ ரயில் திட்டம்: நாகர்கோவில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நாகர்கோவில் நகரில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். பிற வளர்ச்சி திட்டங்கள்:

1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ஷல் நேசமணி பெயரில் புதிய பல்கலைகழகம் அமைக்க வேண்டும். 2) குமரி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட வகையான வாழைபழ வகைகள் பயிரிடபட்டு வருகிறது. இந்த வாழை இனங்கள் அழியாமல் பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கும், நோய்கள் தாக்காமல் இருக்கவும், பொருட்டு குமரி மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். 3) குமரி மாவட்டம் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஒரு மாவட்டம் ஆகும். சிறுபான்மையினர் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் குறைவாக காணபடுகின்றனர். இதை அதிகரிக்கும் பொருட்டு சிறுபான்மையினருக்கான மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைக்கபடவேண்டும். 4) குமரி மாவட்டத்தில் அதினமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக உள்ளனா. இவர்களின் வசதிக்காக பாஸ்போட் விரிவாக்க மையம் மற்றும் சென்னையில் உள்ள வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தமிழக அரசின் நிறுவனத்தின் பிரிவை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும். 5) குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தேன் அதிகமான உற்பத்தி செய்யபடுகிறது. தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயாத்தவும் பொருட்டு மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் 6) இங்கு தேங்காய் அதிகம் பயிரிடப்படுவதால் தேங்காய் ஆராய்ச்சி மையம் அமைத்தல் 7) மகேந்திரகிரி ISRO விரிவாக்கம் செய்து தனி பிரிவாக இயங்கவைத்தல் மற்றும் இதற்காக ராக்கேட் சம்பத்தமான படிப்புகள் கொண்ட NIT கல்வி நிறுவனம் மகேந்திரகிரியில் அமைத்தல், 8) IRE விரிவாக்கம் செய்து அதைசார்ந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், 9) லக்னோவில் உள்ளதை போன்ற மத்திய மருத்துவ முலிகை கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம் மருத்துவாள் மலை பகுதியில் அமைத்தல், 10) குமரியில் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு சாய்சென்டர் அமைத்தல் 11) சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 12) குளச்சலில் மீன்வளகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 13) கீரிபாறையில் வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 14) கன்னியாகுமரியில் உள்ள பழத்தோட்டத்தில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 15) தக்கலை அருகில் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 16) பேச்சிபாறையில் தோட்டகலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 17) திருப்பதிசாரத்தில் உள்ள விவசாயவிரிவாக்க மையத்தை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாற்றம் செய்தல் 18) ஆகமதாபாத்தில் உள்ள NID போன்ற கல்லூரி அமைத்தல் 19) குமரியில் உள்ள மிகவம் சுவை கூடிய காய்கறிகள் மற்றும் விதைகளை பாதுகாக்கும் பொருட்டு காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 20) ரஜாக்கமங்கலத்தில் உள்ள பல்கலைகழக பயோடெக்னாளஜி பிரிவை தனி நானோ டெக்னாளஜிக்கு என தனி பல்கலைகழகமாக மாற்றுதல். 21) ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக இருக்கதால் அதை சார்ந்த தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆரல்வாய்மொழி பகுதியில் அமைத்தல், 22) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துதல் 23) சென்னையில் உள்ள கன்னிமரா நுலகத்தை போன்ற மிக பெரிய அளவில் ஒரு நூலகம் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் படியாக தக்கலை பகுதியில் அமைக்க வேண்டும் 24) மேற்கல்விக்கு என ஓரு அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (PG College and Research Center) 25) கோட்டையத்தில் உள்ள ரப்பர் ஆராய்ச்சி நிலையத்தின் பிரிவு அலுவலகம் களியல் பகுதியில் அமைத்தல் 26) மார்த்தாண்டம் பகுதியல் மத்திய அரசின் கேந்திர வித்யாலையா பள்ளிகூடம் அமைக்க வேண்டும். 27) தில்லியில் உள்ள எய்ம்ஸ் அரசு மருத்துவனை போன்ற மருத்துவமனை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும். 28) நாகர்கோவில் டிப்போவில் பேருந்து பாடி கட்டும் தொழிற்சாலை மீண்டும் அமைக்க வேண்டும். 29) கன்னியாகுமரியில் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைக்க வேண்டும் (REGIONAL SCIENCE CENTRE-Planetarium)

இந்த பதிவை உங்களின் சமூக வலைபக்கங்களில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

C.Kumaradhas, President, Kanyakumari District Freedom Fighters Main Association, Star Illam, Kodumutty Tower Junction, Bethelpuram Post, Kanyakumari District-629803. Cell: 9965370433

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

தமிழ் கத்தோலிக்க திருப்பலி, லண்டன். Tamil Catholic Mass, London.


Tamil Catholic Mass, London.

ஞாயிறு திருப்பலி நேரங்கள்:

மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி:

Southall: 01.30 pm, St. Anselm’s Church ,Southall,UB2 4UL

Kenton: 04.00 pm, All Saints Church ,Kenton Road, HA3 0UL

Wallington: 06.30 pm, St.Elephege’s church, 120 Stafford Road, SM6 9AY

மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி:

Leiceter: 11.00 am, Our Lady of Good Council, 15 Peebles Way, LE4 7ZB

Coventry: 2.30 pm, Holy Family Church, 177 Parkgate Road, Holbrooks, CV6 4GF

Lewshiam: 03.45 pm, St Saviour’s Church, High Street, SE13 6AA

Milton Keynes: 04.30 pm, St.Augustine’s Church, Langcliffe Drive Heelands, MK13 7PL

மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி:

Wembley: 03.30 pm, St Joseph’s Church, 339 High Road, HA9 6AG

Earlsfield: 04.30 pm, St. Gregory’s Church,306 Garratt Lane, Earlsfield SW18 4EH

West Croydon: 02.00 pm, Our Lady of Reparation, 70 Wellesley Road, Croydon, CR0 2AR

மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி:

Eastham: 04.00 pm, St. Antony’s Church, 56 St. Antony`s Road, Forest gate ,Eastham E7 9QB

South End on Sea: 12.30 pm, St. Helen’s Catholic Church, Our Lady Help Christian and St. Helen ,27, Milton Road, Westcliff-On-Sea, SS9 7JP

Reading: 05.00 pm, St.James R.C Church, Forbury Road, Reading, RG1 3HW

வியாழக்கிழமை திருப்பலி:

Tooting: 07.30 pm, St. Boniface Roman Catholic Church, 185 Mitcham Road, Tooting, London, SW17 9PG

இதை வாசிக்கும் அன்பர்கள், லண்டனில் வேறு எங்காவது தமிழ் கத்தோலிக்க திருப்பலி நடைபெறுகிறதென்றால் தயவுடன் பின்னோட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

திங்கள், 5 மே, 2014

லண்டன் விசா? உஷார்!

லண்டன் விசா? உஷார்!

சென்ற வாரம் நண்பன் ஒருவரின் மகனுக்கு லண்டனில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசா கிடைக்க போவதாகவும் அதற்கு ஏற்கனவே பணம் கட்டி விட்டதாகவும், விரைவில் இங்கு லண்டன் வரவிருக்கிறான் எனவும் எனக்கு தகவல் வந்தது. அவன் ஹோட்டலின் பெயரையும் விலாசத்தையும் சொன்னதுமே எனக்கு புரிந்து விட்டது இது மோசடியென. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஒரு லேன்ட்லைன் போன் கிடையாது, வெறும் மொபைல் எண். அவன் சொன்ன இடத்தில் அந்த பெயரில் நட்சத்திர ஹோட்டலே கிடையாது. ஆனால் இந்த மோசடி பேர்வழிகள் ஒரு போலி இணையதளத்தை வைத்து இதை ஏமாளிகளிடம் காண்பிக்கிறார்கள். இந்த லண்டனில் உள்ள போலி இணையதளத்தின் இந்திய பிரதியாக டெல்ஹியை சேர்ந்த பிரியங்கா(போலி பெயராக இருக்கலாம்) என்ற பெண் செயல்படுகிறார். இவர் தன்னை ACO குளோபல் நிறுவனத்தில் பணிபுரிபவராகவும் தன் பெயரிலே டிமான்ட் டிராப்ட் அனுப்பும்படியாகவும் கேட்டு பணம் பெற்றுள்ளார்.
(போலி இணையதளத்தின் படம்)
நியூ ரேவேலேசன் ஹோட்டல் என போலி பெயரில் இணையத்தை வைத்து விட்டு, இந்தியாவில் இருந்து செயல்படும் இந்த மோசடி பேர்வழிகளிடம் யாரும் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். இங்குள்ள சிம் கார்டை வைத்துகொண்டு இந்தியாவில் இருந்து செயல்படுகிறார்கள்! அவர்கள் சொல்லியிருக்கும் இடத்தில் ஒரு சாதாரன ஹோட்டல் மட்டுமே இருக்கிறது, அதுவும் வேறு பெயரில் வேறு தொலைபேசி எண்களுடன்.

தயவு செய்து யாரும் இந்த மோசடி பேர்வழிகளிடம் என் நண்பனை போல ஏமாந்து விடாதீர்கள். மோசடி பேர்வழிகள் பயன்படுத்தும் எண்கள்:

+44-7014212919, +44-7014212918

மோசடி பேர்வழிகள் பயன்படுத்தும் ஹோட்டலின் பெயர்:

New Revelation Five Star Hotel (www.newrevelationhotel.com)

இந்த சம்பவம் இங்கு லண்டனில் நடக்காததாலும் நான் பாதிக்கபடாததாலும் இங்குள்ள போலீசில் இதை தெரிவிக்க முடியாது. என் நண்பனை போல யாராவது இவர்களிடம் ஏமாந்திருந்தால் தயவு செய்து போலீஸ் மற்றும் சைபர் கிரைம்-ற்கு தெரிவியுங்கள். மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

குமரிக்கு ரயில் வந்து 35 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஒரு சிறப்பு பார்வை!


குமரிக்கு ரயில் வந்து 35 ஆண்டுகள் முடிந்து விட்டது. ரயில்வே வளர்ச்சி திட்டங்களில்; கேரளாவை விட 20 வருடம் பின்னோக்கியே உள்ளது. கோட்டம் மாறினால் விடிவுகாலம் பிறக்குமா? பழமை வாய்ந்த மன்னர் நாடான திருவிதாங்கூரின் தமிழ் மொழி பேசும் நான்கு தென்தாலுகாக்களை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கி 1956–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளன்று பிரித்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் கேரளா ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம். இது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்துவிட்டதை பொறுக்க முடியாமல் கடும் வைராக்கியத்துடன் பல்வேறு வழிகளில்; குமரி மாவட்ட மக்களை பழிவாங்குகின்றனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள். இது கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும். ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது. இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. 1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடம் தமிழகத்தின் எல்லைகளை இழந்து விட்டோம் என்கிற குமுறல் தமிழக மக்களிடையே உள்ளது. இப்போது தென்னகத் தொடர் வண்டித் துறை என்பதன் பெயரால், தமிழகத்தொடர்வண்டி இருப்புப்பாதைகளை அண்டை மாநிலங்களின் கோட்டங்களில் இணைத்திருக்கிறார்கள். எனவே முதலாவதாக இவற்றை மீட்டெடுத்து தமிழகத்தின் கோட்டங்களில் இணைக்கவேண்டும் என்று தமிழக மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. வெறும் 20 எம்பிக்கள் இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் டெல்லியில் நெருக்கடி தந்து தங்களுக்குவேண்டியதை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகள் கேரள அரசியல்வாதிகள். பல ஆண்டுகளாக ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. இதனால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ரயில்களைக் கூட மலையாளிகள் தட்டிப் பறித்தனர். தென்னக ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, பெங்களூர், மைசூர் கோட்டங்கள் இருந்தன. இதில் இருந்து பெங்களுர், மைசூர் கோட்டங்களை 2003-ம் ஆண்டு தென்மேற்கு ரயில்வே உருவானபோது அதனுடன் இணைத்துக்கொண்டனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் 02-10-1979-ல் நிறுவப்பட்டது. இக்கோட்டத்தில் இணைக்கப்ட்டுள்ள கேரளாவில் உள்ள ரயில்பாதைகள் முன்பு பாலக்காடு மற்றும் மதுரை கோட்டத்தில் இயங்கிவந்தது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் இன்று வருகின்ற கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்பாதைகள் தொடர்ந்து ரயில்வே துறையால் புறக்கணித்து வருகிறது. இக்கோட்டத்தின் கீழ் வருகின்ற கேரள மாநிலப் பகுதிகளில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு அக்கறையும், முன்னுரிமையும் எடுத்துகொள்கின்ற மலையாள ரயில்வே அதிகாரிகள் குமரி மற்றும் நெல்லை மாவட்டப் பயணிகள் நலனை புறந்தள்ளுவது தொடர் கதையகிவிட்டது. குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்களை இயக்கவும், இங்குள்ள ரயில் வசதிகளைப் பெருக்கவும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக புறந்தள்ளப்;பட்டுவருகின்றன. நமது அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், பிறதலைவர்களும் இதுகுறித்து கண்டுகொள்வதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. ஏனெனில் ரயில் பயணம் என்பது அவர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் சாதாரணப் பொதுமக்களுக்கு இது ஒரு அனுதினப்பிரச்சனையாகும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கிய ஒரு ரயில் நிலையம் ஆகும.; இந்த நிலையம் மூன்று ரயில் இருப்புபாதை வழித்தடங்கள் சந்திக்கும் ஓர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். ஒரு தடம் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து பிறகு இரண்டாக பிரிந்து ஒன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களுர், கோவா வழியாக மும்பை மார்க்கம் பயணிக்கிறது. மற்றமார்க்கம் திருநெல்வேலி, மதுரை, சென்னை வழியாக பிற மாநிலங்களுக்கு பயணிக்கிறது. ஆகையால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் பயணத்துக்காகப்பயணிகள் அலைமோதுகின்ற நிலையமாகவே காணப்படுகிறது. குமரிக்கு ரயில் வந்தது எப்படி:- சென்னை மாகாணா ஆங்கிலேய அரசின் காலகட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும், மணியாச்சியிலிருந்து திருநெல்வேலிக்கும் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைத்து 01-01-1876 அன்று முதல் பயணிகளின் பயன்பாட்டுக்காக ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் திருநெல்வேலிக்கு தென்பகுதியல் உள்ள எந்த ஒரு பகுதிக்கும் ரயில் வசதி கிடையாது. திருவாங்கூர் சமஸ்தானத்து உட்பட்ட தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் திருநெல்வேலிக்கு சென்றுதான் ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் அன்னாளைய சென்னை மாகாண ஆங்கில அரசு இரண்டு அரசுகளின் வணிக நலன்களை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் 1873-ஆம் ஆண்டு தென்பகுதியில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சென்னையிலிருந்து ரயில் இணைப்புகள் மிகவும் தேவையானது என்று உணர்ந்து திட்டமிட்டது. இதற்காக சென்னை மாகாணம் தென்இந்திய ரயில்வே நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தது. அப்போது திருவிதாங்கூர் திவானாக இருந்த ராமங்கஐயர் திருவாங்கூர் அரசின் எதிர்பார்ப்பாக 13 ஆகஸ்டு 1883 அன்று இது பற்றி தென்இந்திய ரயில்வே அதிகாரிகளும் திருவிதாங்கூர் அரசும் விவாதித்தது. இந்த விவாதத்தில் திருநெல்வேலியையும் திருவனந்தபுரத்தையும் ரயில் மூலமாக இணைப்பது பற்றி இரண்டு வழிதடங்கள் பற்றி இணைப்பது பற்றி விவாதிக்கப்ட்டது. அதன்;பிறகு இதற்காக தென்இந்திய ரயில்வே நிறுவன முதன்மை பொறியாளர் திரு பர்டன் தலைமையில் குழு ஒன்றை ஆங்கிலேயே அரசு அமைத்தது. இந்த குழு, முதலில் திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, சிற்றார் மலை தாழ்வாரம் வழியாக திருவனந்தபுரத்துக்கும் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கும் ரயில் பாதை அமைத்து திருவாங்கூரையும் சென்னை மாகணத்தையும் இணைக்கலாம் என்று ஆய்ந்து பரிந்துரை செய்தது. பிறகு தென்இந்திய ரயில்வே நிறுவனம் தென்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தில் திருநெல்வேலி, ஆரால்வாய்மொழி வழியாக திருவனந்தபுரத்தை சென்னை மாகாணத்துடன் இணைக்கலாம் என்றும் அதற்கு பிறகு திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கு ரயில் இணைப்பை நீட்டிப்’பு செய்யலாம் என்றும் ஆய்ந்து இரண்டாவதாக ஒரு வழித்தடத்தையும் பரிந்துரை செய்தது. இந்நிலையில் வடக்கு வழிபாதையாக திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, ஆரியங்காவு வழியாக கொல்லத்துக்கு ஒர் ரயில் இணைப்பு உருவாக்குவதற்காக திருவிதாங்கூர் திவான் முன்கையெடுத்து செயல்புரிந்தார். கோவில்பட்;டியிலிருந்து செங்கோட்டை மார்க்கம் கொல்லத்தை இணைக்கும் ரயில்பாதை இலாபகரமானது என்று ஆங்கில அரசுக்கு தெரிவித்து அந்த வழிதடத்துக்கு அதிக ஆர்வம் காட்டினார். இதனால் 1881-ம் ஆண்டு இறுதியில் தென்இந்திய ரயில்வே நிறுவன அலோசனைப் பொறியாளர் லோகன் திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு, கொல்லம் செங்கோட்டை வழியில் ரயில் விடுவதற்கான பரிந்துரையை சமர்பித்தார். 1882-ம் ஆண்டு இரண்டு வழி தடங்களிலும் உருவாகின்ற இலாப நஷ்டங்களை ஒப்பாய்வு செய்து அவர் அறிக்கையை சமர்பித்தார். அவ்வறிக்கையில்; தென்பகுதி மக்கள் அதிகம் பயன்படும் விதமாக அவர் தென்பகுதி தடத்தை பரிந்துரை செய்தார். ஆனால் திருவிதாங்கூர் திவான் வடவழிபாதையை அதாவது செங்கோட்டை வழித்தடத்தை ஆதரித்தார். ஏனெனில் திருவனந்தபுரத்தைவிட கொல்லம் பெரும் வணிக மையமாக இருந்ததால் அந்த வழித்தடம் இலாபகரமானதாக இருக்கும் என்று முடிவு செய்து பரிந்துரைத்தார். இதனடிப்படையில் வடவழிபாதையை ஏற்றுக்கொண்ட தென்இந்திய ரயில்வே நிறுவன அதிகாரிகள் அதன்பிறகு ஆங்கில அரசு, கொல்லம் - திருவனந்தபுரம் ரயில பாதையை நீட்டிப்புச் செய்திட அனுமதித்தது. திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு முதல் ரயில,; கொல்லம் - புனலூர் வழியாக நவம்பர் 26, 1904-ம் ஆண்டு இயக்கப்பட்டது. கொல்லம் - திருவனந்தபுரம் ரயில் பாதை 1913-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு 1917-ம் ஆண்டு முடிக்கப்ட்டது. 1918-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வர்த்தக முறையில் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்துவிடப்படட்டது. தொடக்கத்தில் திருவனந்தபுரம் ரயில் நிலையம் நகரத்தின் வெளியே சாலை என்ற இடத்தில் தான் இயங்கிவந்தது. 1926-ம் ஆண்டு இந்த வழித்தடம் மேலும் திருவனந்தபுரம் நகரின் மையபகுதிக்கு நீட்டிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்ட்டன. அப்போதைய திவான் வாட்ஸ,; திருவனந்தபுரம் ரயில்நிலையத்தை நகரத்தின் உள்ளே கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டதின் பயனாக நவம்பர் 04 -1931-ம் ஆண்டு திருவனந்தபுரம் மத்தியில் தம்பானூரில் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த சூழ்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பாதையை விரிவுப்படுத்துவதற்கு எந்தவொரு திட்டமோ அல்லது அறிக்கையோ அரசிடம் இருக்கவில்லை. இது குறித்து யாருமே திவானிடம் கோரிக்கை அல்லது மற்றும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் 1928-ல் ரயில்பாதையை நாகர்கோவில் வரை நீட்டிக்க கோரி ஓர் விண்ணப்பம் தரப்பட்டது. இதனை சமர்பித்தவர் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சார்ந்த திரு டி. பிறான்சீஸ் அவர்கள் ஆவார். இவர்தான் நாகர்கோவிலுக்கு ரயில் வசதி வேண்டும் என்று கோரிய முதல் பெருந்தகையாவர் ஆவார். ராமன்புதூரை சார்ந்த திரு டி. பிறான்சீஸ் அவர்களை 1908-ம் ஆண்டு திருவிதாங்கூர்; திவான் திரு இராசகோபாலாச்சாரியார் ஸ்ரீமுலம் பாப்புலர் சட்டமன்ற உறுப்பினராக நியமித்தார். 1927-28 –ஆம் ஆண்டுகளில் நடந்த 17 மற்றும் 24-வது ஸ்ரீமுலம் சட்டமன்றக் கூட்டத்தொடரில், கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையில் உள்ள ரயில்பாதையை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அன்னாரது வேண்டுகொளை அரசு ஏற்றுக்கொண்டு, திட்டத்தை ஆய்வு செய்தது. 01-03-1928 அன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் திருவிதாங்கூர் திவான்; திரு பிறான்சீடம் திருவனந்தபுரம் -நாகர்கோவில் ரயில் பாதை ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும் ஆனால் கட்டுமானப் பணியைத் தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளது என்றம் தெரிவிக்கப்ட்டது. ஏனெனில் சாக்கை – தம்பானூர் ரயில் பாதை பணியில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதால் திட்டம் நிலுவையில் வைக்கப்ட்டது. ஆயினும் சாக்கையிலிருந்து தொடங்குகின்ற இப்பணியே தெற்கு நோக்கி ரயில் பாதை விரிவடைவதற்கான முதற்படியாகும் என்றும் விளக்கம் கூறப்பட்டது. இவ்வாறு குமரிக்கு ரயில் வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் சான்றோன் திரு. பிறான்சிஸ் ஆவார். அவருக்குப்பிறகு குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் பாராளுமன்றத்தில்; இதற்காகக் குரல் கொடுத்தார். இதன்பயனாக 1956-57-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் திருவனந்தபுரம் -திருநெல்வேலி –கன்னியாகுமரி ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணிக்கு அனுமதிக்கப்ட்டது. அன்று ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதூர்சாஸ்திரி அவர்கள் 23 பெப்ரவரி 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்த திட்டத்தை அறிவித்தார். அந்த ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் இருந்தார். இந்த ஆய்வு, 1965-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த எஸ்.கே பட்டில் அவர்கள் 1965-ம் ஆண்டு பெப்ரவரி 18-ம் தேதி பாராளுமன்றத்தில் ஆய்வு நிறைவு பெற்றதாக அறிவித்தார். கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில்பாதைக்கள் மொத்தம் 164.02 கி.மீ அமைக்க 1972-73-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில், 14.53 கோடிகள் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் ஹனுமந்தையா அவர்களால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக திருவனந்தபுரம் - நாகர்கோவில் -கன்னியாகுமரி திட்டமும், இரண்டாம் கட்டமாக நாகர்கோவில் -திருநெல்வேலி ரயில் பாதையையும் செயல்படுத்தப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக காமராஜர் இருந்தார். இந்த பட்ஜெட்டில் தான் திருநெல்வேலி –மணியாச்சி மற்றும் தூத்துகுடி – மதுரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில்பாதையாக மாற்றவும் அறிவிக்கப்ட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972-ம் ஆண்டு செட்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த ரயில் பாதையில் மொத்தம் 24 ரயில் நிலையங்களும் இதில் 7 கிராசிங் ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு மொத்தம் 567 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த வழிதடத்தில் 16 பெரிய பாலங்களும் 405 சிறிய பாலங்களும், 29 மேம்பாலங்களும், 12 கீழ்பாலங்களும் அமைக்கப்பட்டன. பிரதமர் இந்திராகாந்தி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரயில் மூலம் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக இந்த ரயில் பாதை விளங்கும் என்று, திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்கும் பணியைப் பிரதமர் இந்திராகாந்தி தொடக்கி வைத்துப் பேசினார். இந்த விழாவிற்குத் தமிழக முதல்அமைச்சர் கருணாநிதி கேரளா முதலைமைச்சர் அச்சுதமேனன், மத்திய ரயில்வே அமைச்சர் பாய் போன்றோர் கலந்து கொண்டனர். இந்திராகாந்தியின் அவசரகால தடா சட்டத்துக்கு காமராஜர் எதிராக இருந்தமையால் அவருக்கு நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் கூட விழாவுக்கு மலையாளிகளால் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஆயினும் காமராஜர் இந்த விழாவில் மக்களோடு மக்களாக பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கலந்து கொண்டார். இதை கவனித்த பிரதமர் இந்திராகாந்தி, காமராஜரை மேடைக்கு அழைத்து உட்காரவைத்து கவுரவித்தார். இந்த நிகழ்வு மூலம் 1972-ம் ஆண்டிலிருந்தே ரயில்வேயின் மலையாளி அதிகாரிகளால் கன்னியாகுமரி மாவட்டம் ரயில்வே மேம்பாடு முற்றிலும புறக்கணிக்கப்ட்டு வருகிறது என்பதைத் காணமுடிகிறது. ரயில்வே உதவி மந்திரி குரோஷி இந்த ரயில் பாதையின் முக்கியத்துவத்தை விளக்கினார். பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு கன்னியாகுரிக்கு ரயில் விடவேண்டுமென்பதில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. கன்னியாகுமரியின் இயற்கை அழகு அவரை வெகுவாகக் கவர்ந்திருந்தது. தவிரவும், ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்ற சொற்த்தொடர் உயிரூட்டப்பட வேண்டுமென்றால்;, குமரிக்கு ரயில் பாதை முக்கியத்தேவையென்று அவர் உணர்ந்திருந்தார். கன்னியாகுமரியில் எங்கே ரயில் நிலையம் அமைப்பது என நேரில் சென்று ஆராய்ந்து இடம் தேர்வு செய்திட ரயில்வே அமைச்சர் ஹனுமந்தையாவை அம்மையார் அனுப்பி வைத்தார்கள். அதிகாரிகள் மற்றும் நண்பர்களைக் கலந்தாலோசித்து, குமரி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் ரயில் நிலையம் அமைக்கலாம் என இடம் தேர்வு செய்து பிரதமரிடம் ஹனுமந்தையா அறிவித்தார். அந்த இடம் இந்திரா அம்மையாருக்கு மனத்திற்குத் திருப்தியைத் தரவில்லை. ஆலயம் வரை இரயில் வருமானால், ஆலயமும், அதன் எதிரில் அமைந்த முக்கடலின் அழகும் குன்றி, இரயில்வே நிலையப் பரபரப்பும், தோற்றமுமே மிஞ்சும் என்பது அவரது கருத்து ஆகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் கன்னியாகுமரிக்கு விஜயம் செய்த பிரதமர் இந்திராகாந்தி, ஒருநாள் அதிகாலையில் தனது பாதுகாவலர்களைக் கூடத் பாதுகாப்பாக வர வேண்டாமெனக் கூறி விட்டு, கடற்கரையில் நீண்ட தூரம் தனிமையில் நடந்து சென்றார். குமரி அம்மன் ஆலயத்தை தவிர்த்து சிறிது தொலைவில் உகந்த ஓர் இடத்தை தானே தேர்ந்தெடுத்து, நிலையம் அங்கு அமைக்கப்படுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். குமரி ரயில் நிலையம் அந்த இடத்தில்தான் உருவாகியுள்ளது சிறப்பு. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதையை அப்போதைய பிரதமர் மெறார்ஜிதேசாய் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். திறப்புவிழாவின் போது இயக்கப்ட்ட முதல் ரயில் நான்கு மணி நேரத்தில் 85 கி.மீ., தூரத்தைக் கடந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. அவ்வமையம் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக குமரிஅனந்தன்; இருந்தார். இந்த பாதையில் 31கி.மீ தூரம் கேரளாவிலும் 54 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. முதல் கட்டப் பணிகள் முடிவு பெற்ற நிலையில், ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த இரண்டாம் கட்ட திட்மான நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இத்தடத்தில் ரயில் சேவை 08-04-1981 அன்று பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. திருவனந்தபுரம் கோட்டம் அமைந்த வரலாறு:- இக்கோட்டம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைக்கப்ட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் 624.730 கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ தொலைவுக்கு வழித்தடம் உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படுகின்ற 25 விழுக்காடு வழித்தடங்கள் நெல்லை மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் இயங்குகிறது. குமரி மாவட்ட ரயில் தடங்கள் அமைக்கபட்டு சில காலங்கள் மதுரை கோட்டத்தின் கீழ் இருந்தது. திருவனந்தபுரம் ரயில் கோட்டம் 02-10-1979 அன்று அமைக்கப்ட்டது. இந்த ரயில்வே கோட்டம் அமைக்க 1978-79 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்டது. இது நடந்த போது நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் குமரிஅனந்தன் ஆவார். இதல் அவர் மவுனம் சாதித்தார அல்லது ஒத்துளைப்பு தந்தாரா என்று பாராளுமன்ற உரைகளை சரிபார்த்துதான் கூறமுடியும். அவ்வமையம் திருநெல்வேலியிலிருந்து இருப்புபாதை இணைப்பு நாகர்கோவிலுக்கு இல்லாதிருந்ததனால், இதன் நிர்வாகப் பொறுப்பை 1979 அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன், ஒரு நிபந்தனையுடன் இணைக்கப்பட்டது. நிபந்தனை யாதெனில், திருநெல்வேலி - நாகர்கோவில் இணைப்பு முடிந்த உடனே குமரி மாவட்ட உள்ள அனைத்து ரயில் போக்குவரத்து நிர்வாகத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்து விட வேண்டும் என்பதேயாகும். நாகர்கோவில் - திருநெல்வேலி 73.29கி.மீ தூரம் ரயில்வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடம் துவங்கப்பட்டதும் குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்தாமல் நிர்வாகத்தை திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடர்ந்து நீடிக்கச் செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் புதிதாக துவங்கப்ட்ட ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டது. இவ்வாறு திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைப்பதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. குமரி மாவட்ட மக்கள் ரயிலைப்பற்றிய போதிய விளிப்புணர்வு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் எந்த வித போராட்டமோ கோரிக்கையோ வைக்கப்படவில்லை. இந்த போராட்டத்தில் குமரி மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நெல்லை மாவட்ட மக்களுடன் இணைந்து போராடியிருந்தால் குமரி மாவட்ட ரயில்வழித்தடங்கள் அணைத்தும் 1981-ம் ஆண்டே மதுரை கொட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். திருநெல்வேலி மாவட்ட மக்களின் இந்த போராட்டங்களையும் மீறி இந்த திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டன. ரயில்கள் கடந்து வந்த பாதை எண் வருடம் தற்போதைய வண்டி எண் வண்டி விபரம் சேவை 1979 56311/56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் தினசரி 1979 56316/56315 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில தினசரி 1981 56312/56321 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் தினசரி 1983 56319/56320 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் பின்னர் கோவை வரைநீட்டிப்பு செய்யப்பட்டது தினசரி 1985 56701/56700 கொல்லம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் பின்னர் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தினசரி 1984 16317/16318 கன்னியாகுமரி – ஜம்முதாவி ரயில் வாரத்திர சேவை 1984 16381/16382 கன்னியாகுமரி – மும்பை தினசரி எக்ஸ்பிரஸ் தினசரி 1988 16525/16526 திருவனந்தபுரம் - பெங்களுர் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு தினசரி 1992 16525/16526 நாகர்கோவில்- பெங்களுர் ரயில் கன்னியாகுமரி; வரை நீட்டிப்பு தினசரி 1992 16336/16335 நாகர்கோவில் - காந்திதாம் எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை 1994 12634/12633 கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி 1994 16128/16127 நாகர்கோவில் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் தினசரி 1995 16339/16340 நாகர்கோவில் - மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை 1996 16339/16340 நாகர்கோவில் - மும்பை வாராந்திர ரயில் வாரத்துக்கு மூன்று நாள் இயக்கம் வாரத்துக்கு மூன்று நாள் சேவை 1998 16339/16340 நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு மூன்று நாள் ரயில் நான்குநாள் இயக்கம் வாரத்துக்கு நான்கு நாள் சேவை 1998 16336/16335 நாகர்கோவில் - காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் கொங்கன் ரயில் பாதையில் வழித்தடம் மாற்றி விடப்பட்டது 2000 16351/16352 நாகர்கோவில் - திருப்பதி எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 2 நாள் 2000 12665/12666 ஹவுரா – திருச்சி வாரத்துக்கு மூன்று நாள் ரயிலில் ஒருநாள் சேவை மட்டும் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. வாரத்திர சேவை 2001 12660/12659 நாகர்கோவில் -ஷாலிமர் எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை 2002 12641/12642 கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை 2002 16723/16724 சென்னை – திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு ஆறு நாள் மட்டும் வாரத்துக்கு ஆறு நாள் மட்டும் 2004 12689/12690 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாரத்திர சேவை 2005 16723/16724 சென்னை – திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாற்றம் தினசரி 2006 12668/12667 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாரத்திர சேவை 2007 16609/16610 நாகர்கோவில் - கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி 2007 56304 கோட்டையம் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு தினசரி 2009 22619/22620 திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாரத்திர சேவை 2009 12998/12997 திருநெல்வேலி - ஹாப்பா வாரத்துக்கு 2 நாள் 2010 22622/22621 கன்னியாகுமரி – ராமேஸ்வரம் வாரத்துக்கு 3 நாள் 2010 16605/16606 கொச்சுவேலி – மங்களுர் ஏரநாடு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு வாரத்துக்கு 3 நாள் 2010 16605/16606 நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் வாரத்துக்கு 3 நாள் தினசரி ரயிலாக மாற்றம் தினசரி 2011 15906/15905 கன்னியாகுமரி – திப்ருகர் வாரத்திர சேவை 2011 66305/66304 நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் வாரத்துக்கு 6 நாள் 2012 16649/16650 திருவனந்தபுரம் – மங்களுர் பரசுராம் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு தினசரி 2012 12641/12642 கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் வாரந்திர ரயில் வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலாக மாற்றம் வாரத்துக்கு 2 நாள் 2013 16862/16861 கன்னியாகுமரி – புதுச்சேரி வாரத்திர சேவை 2013 17236/17235 நாகர்கோவில் - பெங்களுர் வழி மதுரை தினசரி 2013 66305/66304 நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு வாரத்துக்கு 6 நாள் 2013 56325 நாகர்கோவில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி 2013 56321 திருநெல்வேலி - கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி 2013 56312 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி 2014* நாகர்கோவில் - காச்சுகுடா(ஐதராபாத்) வாராந்திர ரயில் 2014* கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில் தினசரி *2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்ட்ட ரயில் பின்னர் இயக்கப்படும். குமரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இப்பிராச்தியத்தைப் பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும்; கடந்த 34 ஆண்டுகளாக எடுக்கவில்லை. தற்போது இந்த பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வருவதோடு நின்று விடுகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் காட்டப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தமாக நாகர்;கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு, வீராணிஆளுர், சுசிந்திரம், தோவாளை உட்பட 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் பெரிய எ பிரிவு ரயில் நிலையங்கள் ஆகும். இந்த 11 ரயில் நிலையங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் அதிக இடைவெளித் தூரத்திலும் பேருந்து வசதிகள் இல்லாத ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களில் பொதுமக்கள் ரயில் நிலையத்தை உபயோகபடுத்தக் கூடாது எனற் உள்நோக்குடனேயே அமைத்துள்ளனர் இந்த மலையாள அதிகாரிகள். இந்த காரணத்தால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் இச்சிறு நிலையங்களிலிருந்து ரயிலில் பயணம் மேற்கொள்ள யோசிக்கவைக்கிறது. முதல் திட்ப்படி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் செட்டிகுளம் இந்துகல்லூரி இடையில் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்காக ஆளுரில் இருந்து நேர்பாதையாக டாக்டர் மத்தியதாஸ் வீட்டுக்கு தென்புறம் வழியாக செட்டிகுளம் வந்தடையும். பிறகு இதில் மாற்றம் செய்து ஒழுகினசேரி பயோனியர்முத்து தியேட்டர் இடத்தில், மீனாட்சிபுரம் பஸ்நிலையம் அமைப்பதற்கான திட்டமிடப்பட்டதும். பிறகு இதையும் ஒதுக்கிவிட்டு ஊருக்கு ஒதுக்குபறம்பான கோட்டார் பாஜார் அருகில் நிறுவப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தலையீட்டால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நடந்தன. ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் நகரத்தின் முக்கிய பகுதிகளில்தான் அமைக்கப்ட்டுள்ளது என்பது நோக்குதற்குரியது. எண் ரயில் நிலையம் நிலை நிதிஆண்டு 2011-12 1 நாகர்கோவில் சந்திப்பு A 262788715 2 கன்னியாகுமரி A 110319022 3 குழித்துறை B 40435594 4 இரணியல் E 11247700 5 ஆரல்வாய்மொழி E 2182638 6 நாகர்கோவில் டவுண் E 6873310 7 குழித்துறை மேற்கு F 951106 8 பள்ளியாடி F 399510 9 சுசீந்தரம் F 0 10 தோவாளை F 127898 11 வீராணிஆளுர் F 177614 12 மேலப்பாளையம் F 154459 13 வள்ளியூர் D 35156321 14 நான்;குநேரி D 10301839 15 செங்குளம் E 64892 16 பணக்குடி F 125287 மொத்த 2011-12-ம் ஆண்டு வருமானம் 481305905 ரயில்வே துறையால் இரண்டு பக்கத்திலிருந்தும் மரண அடிவாங்கும் குமரி மாவட்டம். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டம் ஆகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்;த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த 2012 ரயில் பட்ஜெட்டில் திருச்சி – திருநெல்வேலி தினசாரி ரயில், திருநெல்வேலி – தாதர் வராந்திர ரயில், தாதர் -பெங்களுர் வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு ஆகிய ரயில்கள் திருநெல்வேலிக்கு அறிவிக்கபட்டுள்ளது. இந்த ரயில்கள் நாகர்கோவிலிருந்து இயக்கபட்டு இருந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பயணிகளுக்கும் ரயில் வசதி கிடைத்திருக்கும், குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு மார்க்கம் அனைத்து ரயில்களையும் திருவனந்தபுரத்துடன் ரயில்வே துறை நிறுத்திவருகிறது. தற்போது ரயில்வேதுறை அனைத்து ரயில்களையும் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதுரை மார்க்கம் இயக்குமாறு அறிவிக்கபட்டுள்ளது. கடந்த 2012 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மூன்று ரயில்கள் திருநெல்வேலியுடன் நிற்பதையும் வேடிக்கை பார்ப்பதை தவிர குமரி மக்களுக்கு வேறு வழி இருக்காது. இது “நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை” என்ற கூற்று உண்மையாகி வருகிறது. இவ்வாறு குமரி மாவட்டத்துக்கு இரண்டு மார்க்கத்திலிருந்தும் மரணஅடிவாங்கி வருகிறது. குமரி மாவட்ட பயணிகள் நெடுந்தூரங்களுக்கு பயணிக்க திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி வரை பேருந்துகளில் பயணம் செய்து அங்கிருந்து புறப்படும் ரயில்களில் பயணிப்பதை தவிர வேறு வழி இல்லை. கேரளத்தவரின் ஒற்றுமை:- கேரள மாநிலத்தை பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்கள் மாநில நலனுக்கு, மக்கள் நலனுக்கு எதாவது தேவையென்றால் அனைத்து. கவனிக்க அனைத்து கட்சியினரும் தங்கள் பிரச்சனைகளை மறந்து ஒன்று திரண்டு எதிர்கட்சி முதல்வர் உட்ப்பட மத்திய அரசிடம் வாதாடி பெற்றுக்கொள்கிறார்கள். கேரள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற பயம் ஒன்று. மரியாதை (பிரெஸ்டீஜ்) குறையும் என்கிற பயம் இரண்டு. அதன் காரணமாக தான் கேரளத்தில் இருக்கும் ஒரே ஒரு ரயில் தடமான திருவனந்தபுரம் - மங்களுர் பாதையும் அதன் துணைபாதைகளான ஷொரனூர்-பாலக்காடு-கோவை; திருச்சூர்-குருவாயூர்; எர்ணாகுளம்-செங்கனூர்-கோட்டயம் ஆகிய பாதைகள் முழுமையும் அகலபாதையாகவும் மின்மயமாகவும் ஆக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, ஒற்றுமை என்பது நம்மிடம் சுத்தமாக இல்லை. அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒவ்வொரு சிறு பிரச்சனையையும் மிக மிக குறுகிய மனப்பான்மையுடன் அணுகி, ஒன்றுமேயில்லாத பிரச்சனைகளை கூட ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காயும் இயல்பு மாறாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய பல ரயில்கள், பல ரயில்பாதைகள், மின்மயமாக்கல் போன்றவை ஆமை வேகத்தில் இயங்கி வருகின்றன. அழுகிற குழந்தைக்கு தான் பால் என்பதை போல, வற்புறுத்திக்கொண்டிருப்பவர்களை முதலில் கவனித்துக்கொண்டால் மற்றவர்களை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலை மத்திய ரயில்வே வாரியத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்தையும், விஷமமாகவும், குறுகிய மனப்பான்மையுடனும், தனிப்பட்ட அரசியல் விஷயமாகவும், யார் மீது குற்றம் சுமத்தலாம் என்கிற காரண தேடலுடனும் மட்டுமே அணுகிக்கொண்டிருப்பதற்கு மிக பெரிய உதாரண பட்டியலே இருக்கிறது. இதை போல் கடந்த ஐந்து ஆண்டுகால ரயில் பட்ஜெட்டை பார்த்தால் தமிழகத்தில் உள்ள ஓர் சிறிய ஊருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கு மட்டும் புதிய ரயில்கள் இயக்கப்படுவதை காணலாம். ரயில்களை முக்கிய நேரடி ரயில் பாதை (மெயின் லைன்) வழியாக இயக்குதல்: குமரி மாவட்டத்தில் 1979-ம் ரயில் நிலையம் அமைக்கும் போதே இங்கு உள்ள 11 ரயில் நிலையங்களில் குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்கள் கிராசிங் ரயில் நிலையங்களாக அமைக்கப்பட்டன. இந்த ரயில்நிலையங்களை அமைக்கும் போதே ரயில்வே அதிகாரிகள் தொழில் நுட்பக்கோளாறாக முதலாம் நடைமேடையை பக்க இணைப்பு ரயில் பாதை (லூப் லைனாக) வரும்படி அமைத்துள்ளனர். இது நடைமுறைக்கு மாறான தொழிற்நுட்பத்தவறாகும். இது தெற்கு ரயில்வே அதிகாரிகளின் உள்ளடிவேலை ஆகும். இவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். சென்ற 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் குமரி மாவட்ட ரயில் பகுதிகளில் அனைத்து ரயில்களையும் நேரடி ரயில் பாதை (மெயின் லைன்) வழியாக அதாவது நடைமேடை இரண்டு வழியாக இயக்குகின்றனர். ஆனால் இந்த ரயில்கள் நிலையத்தில் வரும் சமயத்தில் முதல் நடைமேடை காலியாக இருக்கிறது. இது குறித்து நிலைய மேலாளரிடம் முறையிட்டால் ரயில்களின் காலம் தவறாமல் இயக்குதல், ரயில்களின் இயக்கக்குறித்த காரணங்களுக்காகவும் இவ்வாறு இயக்கபடுகிறது என்று தெரிவிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை இரண்டில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளான இருக்கை, நடைமேடை மேற்கூரை, தண்ணீர் வசதி, பெட்டிகளின் தகவல் அறியும் பலகை போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இது மட்டும் இல்லாமல் ஒரு சில ரயில் நிலையங்களில் நடைமேடை இரண்டுக்கு செல்ல நடைமேடை மேம்பாலம் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமபடுகின்றனர். அபாயம் நிறைந்த ரயில் பாதையைக் கால்நடையாக கடந்துதான் நடைமேடை இரண்டிற்கும் செல்லவேண்டியுள்ளது. சிறுபிள்ளைகளையும் மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு தண்டவாளங்களை கடப்பதைவிட ரயில்பயணத்தைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய நெறிதவறிய அமைப்புமறைகளை மலையாளி பொறியாளர்கள் கையாண்டனர் என்றுகூக் கருதலாம். பொதுவாக குமரிவாழ் தமிழர்களுக்கு தொல்லை தருவதிலேயே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் மலையாளிகள் இதை ஏன் என்று கேட்பதற்கு குமரிதந்தை மார்ஷல் எ.நேசமணிக்குப்பிறகு இம்மணிணில் எவரும் தோன்றவில்லை என்பதே துயரைதருகிறது. தன் கையாலே தன் கண்ணை குத்தும் படி செய்யும்; திருநெல்வேலி கோட்டம்.:- தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில் வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் கீழ் கொண்டு செல்ல மறைமுகமாக சதிவலை பின்னப்பட்டுள்ளது. ஒரு ரயில்வே மண்டலம் வேண்டும் என்றால் மூன்று கோட்டங்கள் தேவை. கேரளாவினர் அவர்கள் மாநிலத்துக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர். கேரளாவில் தற்போது 1050கி.மீ தூரம் ரயில் வழி தடம் மட்டுமே உள்ளது. ஆனால் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு என இரண்டு ரயில் கோட்டங்கள் உள்ள தமிழக ரயில் வழி தடங்களை சேர்த்து மொத்தம் 1200 கி.மீ ரயில் வழி தடங்கள் உள்ளன. கேரளாவில் புதிய ரயில்வழி தடங்கள் திட்டங்கள் புதிதாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மூன்றாவது கோட்டத்துக்கு சேலம் அல்லது மதுரை கோட்டத்தின் மீது கண் வைத்துள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் என்று நாம் கோரிக்கை வைத்தால் அவர்கள் வெகு சுலபமாக அந்த புதிய கோட்டத்தை உள்ளடக்கி கேரளாவுக்கு சாதகமான மத்திய அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள் மூலமாக உள்ளடி வேலைகளில் ரகசியமாக ஈடுபட்டு கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வாங்கி வெகு சுலபமாக பெற்றுவிடுவார்கள். தெற்கு ரயில்வேயில் புதிதாக எதாவது ஒரு கோட்டம் அமைக்கபடுமானால் கோரளா எல்கையில் அருகில் உள்ள மதுரை அல்லது சேலம் கோட்டத்ததை உள்ளடிக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் அமைத்து விடுவர். ஏற்கனவே பாலக்காடு கோட்டத்திலிருந்து 50 வருட போராட்டத்துக்கு பிறகு தனி கோட்டமாக உருவெடுத்த சேலம் கோட்டதை மீண்டும் கேரளா ரயில்வே மண்டலத்துடன் இணைக்கு சாத்திய கூறுகள் குறைவு மற்றும் அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த மூடியாத நிலை உள்ளது. அவர்களின் அடுத்த இலக்க மதுரை கோட்டம்தான். இந்த நிலையில் மதுரை கோட்டத்தை இரண்டாக பிரித்தால் நாமே கேரளாவை தலைமையிடமாக கொண்ட ரயில்வே மண்டலம் உருவாக்க வழிவகை செய்வதாக அமைந்துவிடும். இவ்வாறு செய்தால் தென்தமிழக ரயில் வழிதட பகுதிகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்கரை ரயில்வே மணிடலத்தின் கீழ் வந்து விடும். சென்னையை தலைமையிடமாக தெற்கு ரயில்வே கீழ் உள்ள போதே தென்தமிழ்நாடு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறது. இந்த நிலையில் கேரளா ரயில்வே மணிடலத்தின் கீழ் போய்விட்டால் இந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகள் புதிய ரயில்கள் இயக்கம் என்பதே இல்லாத நிலை ஏற்படும். குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள ரயில் வழி தடங்களை மதுரை கோட்டத்துடன் உடணடியாக இணைக்க வேண்டும். கேரளாவை தலைமையிடமாக தனி மண்டலம் அமைப்பதற்கு ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். திருநெல்வேலியில் புதிய கோட்டம் உருவாக்கப்பட்டால் சென்னையை தலைமையிடதாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஏழு கோட்டங்கள் உருவாகும். இந்தியாவில் இது வரை எந்த மண்டலத்திலும் ஏழு கோட்டங்கள் இல்லை. கேரளாவிலிந்து உடனடியாக தெற்கு ரயில்வே மண்டலத்தை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என தனிமண்டலம் வேண்டும் என கோரிக்கை வலுபெற்று பிரித்து விருவார்கள். தற்போது திருநெல்வேலியை தலைமையிடமாக தனி கோட்டம் வேண்டும் என்று கோரிக்கைக்கு பின்பு கேரளாவை சார்ந்த ரயில்வே அதிகாரிகள் உள்ளனர். இதைபோல் கேரளாவில் உள்ள பத்திரிகைகளிலும் திருநெல்வேலி கோட்டம் என்று செய்திகள் அடிக்கடி வெளியீட்டு வருகின்றனர். இது அவர்களின் தூண்டுதலிலேயே நடைபெறுகிறது. அவர்கள் கேரளாவுக்கு என தனி மண்டலம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி நம்மை தூண்டிவிட்டு அவர்கள் தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில் வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் மழு கட்டுபாட்டில் கொண்டு சென்று விடுவார்கள். தற்பொது திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றம் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வளர்ச்சி மற்றும் புதிய ரயில்கள் இயக்கத்தை ஒப்பிடும் போது மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுகர் மாவட்டங்களில் உள்ள ரயில் வளர்ச்சி, ரயில் நிலையங்கள் மற்றும் புதிய ரயில்கள் இயக்கம் புறக்கணிப்பு இல்லாமல் நல்ல நிலையில் உள்ளன. கடந்த 2012 ரயில் நிதிநிலை அறிக்கையில் கூட திருநெல்வேலியிருந்து மூன்று புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. திருநெல்வேலி மற்றும் அதைசுற்றிய பகுதிகளிலிருந்து வரும் காலங்களில் அதிகமான புதிய ரயில்கள் இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது. திருநெல்வேலி கோட்டம் உருவாக்கி அதை உள்ளடக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் உருவாக்குவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். குமரி மாவட்டம் திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போது உள்ளதால் நாங்கள் படும் கஷ்டம் தெரிந்த காரணத்தால் கேரளா ஆதிக்கம் வேண்டாம் என்று எதிர்க்கிறோம். புறக்கணிப்பு:- திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகின்ற கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது. இக்கோட்டத்தின் கீழ் வருகின்ற கேரள மாநிலப் பகுதிகளில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு அக்கறை எடுத்துகொள்கின்ற திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் நலனை புறந்தள்ளுவது தொடர் கதையகிவிட்டது. குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்களை இயக்கவும், இங்குள்ள ரயில் வசதிகளைப் பெருக்கவும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. நமது அரசியல்வாதிகளும், தலைவர்களும் இதுகுறித்து கண்டுகொள்வதுமில்லை. 1) ரயில்நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குபுறம்பாக அமைக்கப்பட்டது:- குமரி மாவட்டத்தில் உள்ள பல ரயில் நிலையங்கள்; அதிக தூரத்திலும் பேருந்து வசதிகள் இல்லாத ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களில் பொதுமக்கள் ரயில் நிலையத்தை உபயோகபடுத்த கூடாது என்ற நோக்குடனேயே அமைத்துள்ளனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள். ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் பேருந்துநிலையத்தின் அருகிலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்து அடுத்த ஒரு கி.மீ தூரத்தில் அடுத்த ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்துக்கும் அடுத்த ரயில்நிலையத்துக்கும் இடையே சராசரியாக ஆறு கி.மீ தூரம் உள்ளது. 2) தமிழக ரயில்நிலையங்;களை தொழில் நுட்பக்கோளாரக அமைக்கப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து தமிழகம் நோக்கி அமைக்கப்பட்ட ரயில்வழித்தடங்களில் உள்ள நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி கிராசிங் ரயில்நிலையங்களை அமைக்கும் போதே கேரளாவை சார்ந்த அதிகாரிகள் தொழில் நுட்பக்கோளாராக முதலாம் நடைமேடையை பக்க இணைப்பு ரயில் பாதை (லூப் லைனாக) வரும்படி வேண்டும்என்றே அமைத்துள்ளனர். இது ரயில்வே அதிகாரிகளின் உள்ளடிவேலை ஆகும். குமரி மாவட்ட ரயில் பகுதிகளில் அனைத்து ரயில்களையும் நேரடி ரயில் பாதை வழியாக (மெயின் லைன்) வழியாக அதாவது நடைமேடை இரண்டு வழியாக இயக்கி குமரி மாவட்ட ரயில் பயணிகளை வேண்டும் என்றே சிரமப்படுத்துகின்றனர். 3) பயணிகளுக்கு தேவையான (Pயளளநபெநச யுஅநnவைநைள) வசதி செய்தல்: குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைந்திருக்கின்ற திருவனந்தபுரம் கோட்ட ரயில் நிலையங்களிலும் வருமானத்துக்கு ஏற்ப செய்யப்படும் பயணிகளின் வசதிக்கான (Pயளளநபெநச யுஅவைவைநைள) பணிகளை கேரளா அதிகாரிகள் செய்து தருவது இல்லை. தமிழக ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச வசதிகளான குடிநீர் வசதி, பிளாட்பாரம் மேற்கூரை, தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம், இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, கணிப்பொறி முன்பதிவு மையம், ரயில் பெட்டிகளின் விபரம் அறியும் பலகை, இணைப்புசாலை, அமைத்தல், நடைமேடையின் அளவை நீட்டுதல், கணிப்பொறி ஒலிபெருக்கி வசதி, நடைமேடையில் அலங்கார ஓடுகள் பதித்தல்;, கழிப்பிட வசதி, தொலைகாட்சிபெட்டி மூலமாக ரயில்களின் வருகையை அறிவித்தல் போன்ற பல்வேறு விதமான பயணிகளுக்கான வசதிகள் ஏதும் செய்வது இல்லை. 4) இரவு நேர ரயில்கள்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் குமரி மாவட்ட பயணிகள் பயன்படாதவாறு இரவு நெரங்களில் இங்கிருந்து புறப்பட்டு கேரளாவில் பயணிக்கும் போது பகலில் செல்லுமாறு காலஅட்டவணை அமைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு திருநெல்வேலி – பிலாஸ்பூர், நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் என இரண்டு ரயில்கள் இவ்வாறு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட பயணிகளிள் கோரிக்கை ஆகும். 5) கேரளா வழியாக சுற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:- குமரி மாவட்டத்திலிருந்து எண்ணிக்கைக்காக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் ரயில் என்று எடுத்துகொண்டால் மிக சொர்ப்ப அளவிலே உள்ளது. கன்னியாகுமரி – மும்பை;, கன்னியாகுமரி – திருப்புகர்;, நாகர்கோவில் - ஷாலிமார்;, கன்னியாகுமரி – ஜம்முதாவி;, திருநெல்வேலி – பிலாஸ்பூர்;; போன்ற ரயில்கள் சுற்று பாதையில் செல்லும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்களால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த உபயோகமும் இல்லை. இந்த ரயில்களை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கிவிட்டு, வேறு புதிய ரயில்களுக்கு நாகர்கோவிலில் இடமில்லாத படி செய்துவிடுகின்றனர் ரயில்வே அதிகாரிகள். இதில் தமிழக பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றால்; அதிகபயணகட்டணம் செலுத்தி கேரளா வழியாக சுற்றி கூடுதலாக பயணம் செய்ய வேண்டும். இதனால் அதிக பயணநேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது. இந்த பிரச்சகை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு டென்னீஸ் அவர்கள் இது குறித்து 1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் விவாதத்தின் போது கீழ் கண்டவாறு பேசியுள்ளார்கள். “ Now there is Possibility for railway Services through western side i.e. Trivandram side and also through Tirunelveli side. For the operation of Trains from Kanyakumari to other parts such as Delhi, Calcutta, the distance is short through Thirunelveli and such operation can be experimented and such Train services have to be operated. This would save time and also reduce the distance” (Speech by Shri N Dennis, (Nagercoil) in Lok Saba debates, session II – Budget on Thursday the July 25, 1996) அவர்கள் 1996-ம் ஆண்டே பாராளுமன்றத்தில் பதிவு செய்தும் ரயில்வே அதிகாரிகள் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகும் 2001-ம் ஆண்டு நாகர்கோவில் - ஷாலிமர் ரயிலும், 2009-ம் ஆண்டு திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயிலும், 2011-ம் ஆண்டு கன்னியாகுமரி – திருப்புகர் ரயிலும் அறிவிக்கப்பட்டு தொடர்கதையாகவே இயக்கப்பட்டு வருகிறது. 6) ஓரே கோட்டத்தில் இரண்டு விதமான வசதி: கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை பகல் நேரங்களில் இயங்குகின்ற அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யபடும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலே பயணம் செய்யும் கேரளப்பயணிகளின் வசதிக்காக மட்டும் ஓரு வசதி உள்ளது. இந்த வசதி திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி மார்க்கம் இயங்குகின்ற ரயில்களில் கிடையாது. குமரி மற்றும் நெல்லை பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தன் கீழ் வந்தும் இப்பகுதிகள் தமிழக பகுதிகளாக இருப்பதால் இந்த வசதியை கேரளா அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். ஓரே கோட்டத்துக்குள் இரண்டு விதமான வசதிகளை அதிகாரிகள் பின்பற்றிவருகிறார்கள். இது ஓர் மாற்றாந்தாய் நிர்வாகச் சீர்கேடாகும். 7) புதிய ரயில்கள்: ஓவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கேரளாவுக்கு என ஐந்து முதல் பத்து ரயில்கள் அறிவிக்கபட்டு வருகிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியிலிருந்து ஒரு பட்ஜெட்டுக்கு ஒரு ரயில் வீதம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் கோட்ட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அதையும் மீறி ஒரு சில ரயில்கள் அறிவித்தால் அந்த ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு கோரளா வழியாக சுற்று பாதையில் இயங்கும் படி அமைக்கபட்டிருக்கும். இந்த ரயில்களால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை. 8) ரயில் நீட்டிப்பு செய்ய மறுக்கும் கோட்ட அதிகாரிகள்: திருவனந்தபுரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் நெடுந்தூர ரெயில் வசதிகள் உள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களுருக்கு புறப்படும் மூன்று ரயில்களில் எதாவது ஒரு ரெயிலை 87 கி.மீ அருகில் உள்ள கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்வதற்கு கோட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெருவிக்கின்றனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்திலிருந்து பல்வேறு ரெயில்கள் கேரளத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பாக மங்களுர் - நியுடில்லி ரெயிலை எர்னாகுளம் வரையிலும், மங்களுர் - பெங்களுர் ரெயிலை கண்ணூர் வரையிலும், கோவை - பெங்களுர் பகல்நேர ரெயிலை எர்னாகுளம் வரையிலும், சென்னை - கோவை ரெயில் மங்களுர் வரையிலும் கேரளா பயணிகளுக்காக கடந்த காலங்களில் நீட்டிப்பு செய்யபட்டுள்ளன. இதைபோல் தெற்கு ரயில்வே பொது மேலாளராக தாமஸ் வர்கீஸ் இருந்த காலத்தில் சென்னையிலிருந்து வடஇந்தியாவுக்கு இயக்கபட்ட பல்வேறு ரயில்கள் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யபட்டன. ஆனால் இன்றுவரை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக உருப்படியாக பரசுராம் ரயிலை தவிர எந்த ஒரு ரயிலும் நீட்டிப்பு செய்ததாக வரலாறு இல்லை. அதையும் மீறி நீட்டிப்பு செய்தால் அந்த ரயில் சுற்றுப் பாதையில் செல்வதாக இருக்கும் அல்லது நடு இரவு இயங்கும் ரயிலாக இருக்கும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து ரயில்களையும் கேரளாவுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டுமாம்! ஆனால் கேரளாவில் உள்ள எந்த ரயிலும் மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்யபடமாட்டாதாம்!! எவ்வளவு குறுகிய மனபான்மை?! 9) இயங்கிகொண்டிருக்கும் ரயில்களை மாற்றி இயக்க துடிக்கும் கோட்ட அதிகாரிகள்: கடந்த 2012-ம்ஆண்டு ஜுலை மாதம் ரயில் கால அட்டவணையில் திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி, குருவாயூர் - சென்னை, புனலூர் - மதுரை பயணிகள் ரயில் ஆகிய மூன்று ரயில்களை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அதாவது கோட்டார் ரயில் நிலையம் வராமல் இயக்க ஜுலை மாதம் வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் அறிவித்து இயக்க திட்டம் போட்டார்கள். இதை எதிர்த்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், அனைத்து ரயில் நிலைய பயணிகள் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள், குமரி எம்.பி ஹெலன் டேவிட்சன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் அறிவித்து கடந்த ஆண்டு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகளின் தமிழகத்துக்கு எதிரான இந்த திட்டத்தை முறியடித்தனர். இவ்வாறு குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில் பயணிகளை திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வேண்டும் என்றே அவதிக்குள்ளாக்கும் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 10) கேரளாவில் இயங்கும் ரயில்களை பராமரிக்கும் நிலையம்: திருவனந்தபுரம் கோட்டத்தில் திருவனந்தபுரம், ஆலப்புளா, பணிமனைகளில் பராமரித்து வந்த பயணிகள் ரயில் பெட்டிகளை தற்போது நாகர்கோவில் பணிமனைக்கு பராமாரிப்புக்கு என தள்ளிவிட்டிருக்கின்றனர். இந்த ரயில்கள் தற்போது நாகர்கோவில் ரயில் நியைத்தில் உள்ள இரண்டு பிட்லைக்களில் தினசரி இரவு நேரங்களில் இந்த ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை மீண்டும் பழையபடி திருவனந்தபுரம், ஆலப்புள பணிமனைகளில் பராமரிக்கபட வேண்டும். குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக இயக்கப்படும் ரயில்களை மட்டுமே இங்கு பராமரிக்கப்பட வேண்டும். 11) காலி ரயில்பெட்டிகள் அதிக அளவில் நிறுத்தம் தெற்கு ரயில்வே மண்டலத்திலேயே சென்னை சென்ட்ரல்க்கு அடுத்து அதிகமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களின் காலிபெட்டிகள் அதிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளன. இதை மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழே குறிப்பிட்டுள்ள ரயில்கள் தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணி உட்பட அதிக நாட்கள் காலியாக நிறுத்திவைக்கபடும் ரயில்கள் ஆகும். 1) திருபுகர் - கன்னியாகுமரி = 75.00 மணி நேரம் 2) நகர்கோவில் -காந்திதாம் = 56.00 மணி நேரம் 3) நாகர்கோவில் - சாலிமார் = 40.00 மணி நேரம் 4) கன்னியாகுமரி – நிசாமுதீன் = 58.00 மணி நேரம் 12) நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்கள்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் சமீபத்தில் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகள் நடக்க முக்கிய காரணம் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதே ஆகும். ரயில் பெட்டிகளை பாராமரிக்கும் பணிக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. பல ரயில்கள் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் காலியாக நிற்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 13) சந்திப்பு ரயில் நிலையசாலை வாகனங்கள் செல்ல தடை:- நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் செல்லும் சாலையை சரிசெய்து சீரமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த சாலையை சரி செய்யாமல் கனரக வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தி மாதங்கள் பல ஆகியும் சாலையும் சரி செய்யாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவே ரயில்வே நிர்வாகம் உள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏ பிரிவு ரயில் நிலையமான நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தான் இந்த நிலமை. இதைப்போன்ற நிலமை வேறு எந்த ஒரு ரயில் நிலையத்திலும் கிடையாது. 14) சந்திப்பு ரயில் நிலையம் வராமல் இயங்கும் ரயில்களை மாற்றி இயக்க வேண்டும் திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர ரயில் 13 பெப்ரவரி 2009-ம் ஆண்டு தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் திருநெல்வேலி - ஹாப்பா வாரத்துக்கு இரண்டு நாள் ரயில் அதே ஆண்டு ஜுலை 03 தேதி அன்று தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்று வரை நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக இந்த இரண்டு ரயில்களும் இயங்கி கொண்டிருக்கிறது. இவ்வாறு இயங்கிகொண்டிருக்கும் இந்த ரயில்களை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும். 15) கன்னியாகுமரியில் புதிதாக ரயில் முனையம் அமைத்தல்: இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் இயக்கபட வேண்டும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து இயக்கபடும் ரயில்கள் தண்ணீர் நிரப்புவதற்கும், பராமரிப்புக்காகவும் காலியாக நாகர்கோவில் வருகிறது. இதனால் ரயில்வேதுறைக்கு ஆண்டுக்கு கோடிகணக்கில் நஷ்டம் எற்படகிறது. உடனடியாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக மூன்று பிட்லைன்களும் சுமார் பத்து காலி ரயில்பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள் போர்கால நடவடிக்கையாக அமைக்க வேண்டும். இந்;த வசதிகள் அமைத்தால் மட்டுமே இந்தியாவின் கடைசி எல்லையான கன்னியாகுமரியிலிருந்து அனைத்து மாநில தலைநகரங்களுக்கு புதிய தினசரி ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. 16) ரயில்களுக்கு நிறுத்தம் மறுப்பு:- நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் குழித்துறை(மார்த்தாண்டம்) மற்றும் வள்ளியூர் ஆகும். இந்த ரயில் நிலையங்களில்; இவ்வழியாக இயங்கும் சூப்பர் பாஸ்டு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இது வரை நிறைவேற்றபடவில்லை. இதைபோல் இரணியல், ஆரல்வாய்மொழி, நான்குநேரி ரயில் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றபடவில்லை. ஆனால் கேரளாவில் இயங்கும் அனைத்து சூப்பர் பாஸ்டு ரயில்களும் பயணிகள் ரயில் போன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல விதத்தில் இயக்கபடுகிறது. இந்த ரயில்கள் முக்கியத்துவமில்லாத நிலையங்களில் கூட நின்று செல்கின்ற வினோதம் கேரளாவில் நடந்து வருகிறது. 17) புதிய ரயில் நிலையங்கள்:- குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற பகுதிகளில் புதிய ரயில் நிலையம் அமைக்கபட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றபடவில்லை. ஆனால் கேரளாவில் கடந்த காலங்களில் புதிய பல்வேறு ரயில்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 18) மூடப்பட்ட ரயில் நிலையங்கள்:- கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நிலையில் தென்தாமரைகுளம், அகஸ்தீஸ்வரம், காவல்கினறு போன்ற இடங்களில் இருந்த ரயில்நிலையங்களை மூடிவிட்டனர் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள். இந்த ரயில் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 19) பகல் ஒன்பது மணிநேரம் எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லை:- நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி மார்க்கம் காலையில் தினசரியாக செல்லதக்க வகையில் 07:10 க்கு நாகர்கோவில் - கோவை பகல்நேர பயணிகள் ரயில் உள்ளது. இதைவிட்டால் மாலை 04:25 மணிக்கு நாகர்கோவில் - பெங்களுர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த தடத்தில் பகல் 9 மணி நேரத்துக்கு ஒரு தினசரி ரயில் கூட இல்லை. மறுமார்க்கமும் இதே நிலைதான். பலகோடிகள் செலவு செய்து ரயில்பாதை அமைத்து ரயில் இயக்கப்படாமல் இருப்பது எந்த காரணத்துக்காக ரயில் இயக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் மதுரை கோட்டத்தில் கீழ் உள்ள திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு பகல் நேரத்தில் தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதைப்போல் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும். 20) கிராசிங் நிலையங்களை அதிகரித்தல்:- பள்ளியாடி, தென்தாமரைகுளம், நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் - தோவாளை இடையே புதிய கிராசிங் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோட்ட அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை கண்டு கொள்வதே கிடையாது. இந்த ரயில் நிலையங்களில் கிராசிங் வசதி இல்லாத காரணத்தால் ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையத்துக்கு புறநகர் பகுதியில் அதிக நெரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு இந்த மூன்று ரயில் நிலையங்களையும் கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும். 21) வேண்டும் என்றே கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் கேரளத்தில் அமையப்பெற்ற ரயில் பாதைகளில் பெரும்பாலனவைகள் இருவழித் தடங்களாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஒரு சில பாதைகளும் தற்போது இருவழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக பகுதிகளான திருவனந்தபுரம் - கன்னியாகுமரி (87கி.மீ) நாகர்கோவில் - மதுரை (230கி.மீ) வழித்தடங்களை இரு வழிப் பாதைகளாக மாற்றுவதற்கு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் இதுகாலும் எடுக்கப்படவில்லை. இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி. ராமநாதபுரம் வழியாக கிழக்கு கடற்கரை புதிய ரயில்பாதை திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 2008 -09 ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியும் அதில் இன்றுவரை முன்னேற்றம் இல்லை. இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 22) மதுரை கோட்டத்துடன் இணைத்தல் இந்நிலையை சீர் செய்ய ரயில் பயணிகள் இணைந்து சங்கம் அமைத்தார்கள். சங்கங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. குமரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு நடைமேடை மாற்றத்துக்கு எடுத்த முயற்சி கூட தோல்வியில் முடிந்தது. திருவாங்கூர் - கொச்சி பகுதிகயில் உள்ள தமிழக பகுதிகளை பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கால கட்டம் வந்தது போல குமரி மாவட்ட ரயில் நிர்வாகத்தை கேரளாவிலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தென்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள், பயணிகள் சங்கங்களும், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து குழு அமைத்து ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகளை சந்தித்து இது குறித்து போர்கால நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இணைந்து போராடாமல் எதுவும் நடக்கப் போவதில்லை. 1. தெற்கு ரயில்வே மண்டலம் - 16-05-1956 2. மதுரை கோட்டம் - 16-05-1956 3. மதுரை – திருச்சி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 1-09-1875 4. மதுரை – தூத்துக்குடி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1876 5. மணியாச்சி - திருநெல்வேலி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1876 6. திருநெல்வேலி – கள்ளிடைக்குறிச்சி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை -01-06-1902 7. கள்ளிடைக்குறிச்சி – செங்கோட்டை புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை -01-08-1903 8. புனலூர் - கொல்லம் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-06-1904 9. செங்கோட்டை – புனலூர் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 26-11-1904 10. கொல்லம் - சாக்கை புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1918 11. சாக்கை – திருவனந்தபுரம் சென்ட்ரல் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 4-11-1931 12. திருநெல்வேலி – திருசெந்தூர் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 24-02-1923 13. விருதுநகர் - தென்காசி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 30-06-1927 14. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் புதிய அகல ரயில்பாதை – 15-04-1979 15. எர்ணாகுளம் - கொல்லம் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை –01-01-1958 16. திருவனந்தபுரம் கோட்டம் - 02-10-1979 17. திருநெல்வேலி – நாகர்கோவில் புதிய அகல ரயில்பாதை -08-04-1981 18. மதுரை – தூத்துக்குடி மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் - 21-10-1993 19. மணியாச்சி - திருநெல்வேலி மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் - 21-10-1993 20. எர்ணாகுளம் - திருவனந்தபுரம்; மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் –13-09-1976 குமரி மாவட்டத்தின் ரயில்வே வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய கோரிக்கைகள்; கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தமிழகத்தின் அதிக கல்வியறிவு நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு அரசு, அரசு சாந்ந்த அல்லது தனியார் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு உள்ள மக்கள் வெளிஊர்களில் வேலைபார்ப்பது என்பது இந்த மாவட்டத்தின் உள்ள மக்களின் தவிர்க்க முடியாதநிலை ஆகும். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். தலைமை செயலகம், உயர்கல்வி, பல்கலைகழகங்கள், அரசு அலுவல் சர்ந்த அனைத்து பணிகளும் என சென்னைக்கும், மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரயில் வசதி என்பது மிகவும் அத்தியவாசியமான கோரிக்கை ஆகும். புதிய ரயில்கள் விடுதல் போன்ற பல்வேறு ரயில்வே வளர்ச்சி பணிகள் என்பது இந்த மாவட்டத்தின் மொத்த வளர்;சியாக கருதப்படுகிறது. குமரியிலிருந்து ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில்தான் தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. புதிய ரயில்கள்:- 1. நாகர்கோவில் - சென்னை வழி மதுரை புதிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட தினசரி ரயில் இயக்க வேண்டும். 2. கன்னியாகுமரி – ஐதராபாத் வழி மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும். 3. கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். 4. கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், மங்களுர் வழியாக கோவாவிற்கு புதிய தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும். ரயில்கள் நீட்டிப்பு:- 5. திருச்சி – திருநெல்வேலி இன்;;டர்சிட்டி ரயில் நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க வேண்டும். 6. திருவனந்தபுரம் - மங்களுர் 16603/16604 மாவேலி ரயில் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். 7. கொச்சுவேலி – மும்பை 22114/ 22113 வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்; 8. நாகர்கோவில் - மங்களுர் 16605/16606 ஏரநாடு ரயிலை கோவா வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி – கோவா ரயிலாக இயக்க வேண்டும். சேவைகள் அதிகரித்து இயக்குதல்:- 1. கன்னியாகுமரி – நிசாமுதீன் 12641/12642 திருக்குறள் வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றி இயக்குதல் 2. கன்னியாகுமரி – புதுச்சேரி 16861/16862 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம் 3. கன்னியாகுமரி - ஹவுரா 12665/12666 வாராந்திர ரயில் வாரத்துக்கு மூன்று நாள் ரயிலாக மாற்றி இயக்குதல் 4. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் 12667/12668 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம் 5. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 12689/12690 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம் 6. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் 22622/22621 வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம் கேரளா வழியாக சுற்றி செல்லும் ரயில்களுக்கு பதிலாக குறைந்த தூரம் கொண்ட வழித்தடம் வழியாக ரயில்கள் இயக்குதல் 1. சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூர் 12852/12851 வாராந்திர ரயில் மதுரை வழியாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு 2. சென்னை சென்ட்ரல் - சாலிமர் 22826/22825 வாராந்திர ரயில் மதுரை வழியாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு 3. சென்னை எழும்பூர் - திப்ருகர் 15929/15930 வாராந்திர ரயில் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு 4. திருநெல்வேலி – ஜம்முதாவி 16787/16788 வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு 5. கன்னியாகுமரி – மும்பை 16381/16382 தினசரி ரயிலை மங்களுர், கோவா வழியாக மாற்றி இயக்குதல் பயணிகள் ரயில் மற்றும் மெமு ரயில்கள்:- 1. திருநெல்வேலி – கொல்லம் வழி நாகர்கோவில் புதிய தினசரி மெமு ரயில் 2. கன்னியாகுமரி – கொல்லம் புதிய தினசரி மெமு ரயில் 3. கொச்சுவேலி – தூத்துக்குடி பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி 4. கொச்சுவேலி – திருசெந்தூர் பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி 5. கொச்சுவேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி 6. திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணிகள் ரயில் வழி நாகர்கோவில் 7. திருவனந்தபுரம் - மதுரை பகல்நேர பயணிகள் ரயில் வழி நாகர்கோவில் திட்டங்கள் 1. கன்னியாகுமரி – மதுரை ரயில்பாதையை இருவழிப்பாதையாக போர்கால நடவடிக்கையாக மாற்ற வேண்டும். 2. கன்னியாகுமரி – காரைக்குடி 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் உள்ள திட்டமான கிழக்குகடற்கரை ரயில்பாதையை அமைக்க வேண்டும். 3. ஆளுர் - நாகர்கோவில் - செட்டிகுளம் 24கி.மீ புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். 4. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு நிலையம் (லோகோ ஷெட்) அமைக்க வேண்டும். 5. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். 6. நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிதாக மூன்று நடைமேடைகள், ஆறு ஸ்டேபளிங்லைன்கள், புதிதாக இரண்டு பிட்லைன்கள் அமைக்க வேண்டும். 7. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை பழுதுபார்க்கும் பனிமனையை ஒரே நேரத்தில் அதிக அளவில் ரயில்பெட்டிகள் நிறுத்தி பராமரிக்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். 8. கன்னியாகுமரி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து அதிக அளவில் புதிய நடைமேடைகள், ஸ்டேபளிங்லைன்கள், பிட்லைன்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 9. குமரி மாவட்டத்தில் ஒழுகினசேரி, சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும். 10. பள்ளியாடி, தென்தாமரைகுளம், தோவாளை ரயில் நிலையங்களை கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும். 11. பாறசாலை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களை மூன்று தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும். 12. வீராணிஆளுர் ரயில் நிலையத்தில் புதிதாக ரயில்களை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேபளிங் லைன்கள் அமைக்க வேண்டும். 13. நாகர்கோவில் டவுண் ரயில்நிலையத்தில் குட்செட் அமைக்க வேண்டும். 14. கோட்டத்தை மாற்றுதல் கடைசி மற்றும் மிகமுக்கிய கோரிக்கையாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் மாற்றினால் மட்டுமே இந்த பகுதிகள் ரயில்வேத்துறையில் வளர்ச்சி பெறும். மேலே குறிப்பிடப்பட்டள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் முதலில் கோட்டம் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்தால் மட்டுமே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். திருவனந்தபுரம் கோட்டத்தில் இருக்கும் வரை மலையாள அதிகாரிகள் குமரி மாவட்ட வளர்ச்சிக்கு என எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றமாட்டார்கள். மதுரை கோட்டத்துடன் மாற்றினால் மட்டுமே இந்த பகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆகவே முதலில் மதுரை கோட்டத்துடன் மாற்றிவிட்டு அடுத்ததாக குமரி மாவட்ட வளர்ச்சிக்கு மிக எளிதாக திட்டங்களை செயல்படுத்த முடியும். நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!